
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்காக அடையாரில் ரூ.2 கோடியே 80 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள நடிகர் சிவாஜி கணேசன் மணிமண்டபத்தை அவரது பிறந்த நாளான அக்டோபர் 1-ம் தேதி அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.
இந்த விழாவுக்கு மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமை வகித்தார். மணிமண்டபத்தை செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்துவைத்து, சிவாஜி கணேசன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் இந்த விழாவில் சிவாஜி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டது அனைவரும் அறிந்தது தான்.
இந்நிலையில் தற்போது இயக்குனர் முத்துராமன் கொடுத்துள்ள பேட்டியில், நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் அமைத்தது போலவே, 1000திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்து நடிப்பில் சிறந்து விளங்கிய நடிகை மனோரமாவிற்கு மணி மண்டபம் கட்ட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.