
விஷால் ஃபிலிம் ஃபேக்ட்ரி நிறுவனத்தின் ஊழியர்களிடம் 51 லட்சம் ரூபாய் வரி பிடித்தம் செய்து அதை கட்டத் தவறியது தொடர்பாக நடிகர் விஷாலுக்கு வருமான வரித்துறை அனுப்பிய சம்மனுக்கு அவரது ஆடிட்டர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
தென்னிந்திய நடிகர் சங்கப் பொதுச்செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷாலின் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான ‘விஷால் ஃபிலிம் ஃபேக்ட்ரி’ சென்னை வடபழனியில் அமைந்துள்ளது.
இந்த அலுவலகத்தில் கடந்த 23 ஆம் தேதி மூன்றரை மணி நேரம் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையை ஜிஎஸ்டியின் நுண்ணறிவு பிரிவினர்தான் மேற்கொண்டதாகக் கூறப்பட்டது.
ஆனால் இந்த தகவலை பின்னர் ஜிஎஸ்டி நுண்ணறிவுப் பிரிவு மறுத்தது. விஷால் அலுவலகத்தில் சோதனை நடத்திய அதிகாரிகள் யார் என்பதில் குழப்பம் நிலவி வந்த நிலையில், சோதனையை மேற்கொண்டது வருமான வரித்துறையின் ஒரு அங்கமான செலவை மதிப்பிட்டு, வரியை கணக்கிடும் டிடிஎஸ் பிரிவு என்பது பின்னர் தெரிய வந்தது.
இந்த சோதனையின்போது விஷாலின் நிறுவனம் வரிப்பிடித்தம் செய்ததில் 51 லட்ச ரூபாய் வரை அரசுக்கு செலுத்தவில்லை என்று தெரிய வந்தது.
இது குறித்து இன்று நேரில் ஆஜராக விளக்கம் அளிக்க வேண்டும் என விஷாலுக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியது. அதில் விஷாலின் திரைப்பட தயாரிப்பு நிறுவன வங்கி கணக்கு புத்தகத்துடன் இன்று நேரில் ஆஜராகுமாறு வருமான வரித்துறை உத்தரவிட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது..
இந்நிலையில் விஷாலின் ஆடிட்டர் Sridhar வங்கிக் கணக்கு புத்தகத்துடன் வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.