
சீயான் விக்ரம், நயன்தாரா நடிப்பில் ஆனந்த் சங்கர் இயக்கிய 'இருமுகன்' சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இந்த படத்திற்கு அடுத்து விக்ரம், ஹரி இயக்கத்தில் 'சாமி 2' படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் மீண்டும் 'இருமுகன்' படத்தின் வெற்றி கூட்டணியான விக்ரம்-ஆனந்த் சங்கர் மீண்டும் மேலும் ஒரு படத்திற்காக இணையவுள்ளனர்.
அதிரடி ஆக்சன் படமான உருவாக உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் முதல் தொடங்கும் என்றும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் செய்திகள் கிடைத்துள்ளது.
மேலும் இந்த படத்தை ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜா அவர்கள் பிரமாண்டமாக தயாரிக்கவுள்ளதாகவும், இந்த படத்தில் நடிக்கும் நாயகி உள்பட மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.