Sep 20, 2018, 4:38 PM IST
தமிழ் சினிமாவில் மூத்த நடிகர்களில் ஒருவரான நடிகர் விஜய குமார் தன்னுடைய மகள் மீது மதுரவாயால் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜயகுமாரின் மூத்த மகள் நடிகை வனிதா. பிரபல டி.வி. நடிகர் ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக ஆகாஷைடம் விவாகரத்து கேட்டு பிரிந்தார்.
பின்னர் ஆந்திராவை சேர்ந்த தொழில் அதிபர் ஆனந்தராஜ் என்பவரை மணந்தார். இவர்களுக்கு தற்போது 8 வயதில் மகள் உள்ளார்.
ஆனால், இந்த திருமண வாழ்க்கையும் நீடிக்காமல் அவரிடமிருந்து 2012-ம் ஆண்டு வனிதா விவாகரத்து பெற்றார்.
இதையடுத்து வனிதாவிற்கும், நடிகை அல்போன்சாவின் சகோதரரும், நடன இயக்குனர் ராபர்ட்டை காதலித்து வந்ததாக கூறப்பட்டது. ஆனால் இதுகுறித்து ராபட் இருவரும் நட்பு ரீதியாக மட்டுமே பழகியதாக கூறினார்.
இந்நிலையில் வனிதா, அவருடைய தந்தைக்கு சொந்தமாக மதுரவாயலில் உள்ள வீட்டை படப்பிடிப்புக்காக வாடகைக்கு எடுத்துள்ளார். பின் வாடகையும் தராமல் அந்த வீட்டிலேயே வாசித்துள்ளார். இதனால் கடுப்பான நடிகர் விஜயகுமார் பெற்ற மகள் மீதே மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இது குறித்து போலீசார் நேரடியாக வனிதா வசித்து வரும் வீட்டிற்கே சென்று விசாரித்தனர். மேலும் இந்த தகவல் வெளியானதும் பத்திரிக்கையாளர்கள் அங்கு குவிய தொடங்கினர். இதனால் ஆத்திரமடைந்த நடிகை வனிதா, வீட்டில் இருந்து வெளியே வந்து... நைட்டியை மடித்து கட்டி கொண்டு பத்திரிகையாளர்களிடம் இங்கிருந்து போ என சண்டைக்கு சென்றார். இந்த வீடியோ காட்சி வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.