நடிகன எவனும் சீண்ட மாட்டான்...! நக்கிட்டுத்தான் போகணும்...! ஆவேசமாக பேசிய விஜய் சேதுபதி

 
Published : Jan 20, 2018, 05:18 PM ISTUpdated : Sep 19, 2018, 01:51 AM IST
நடிகன எவனும் சீண்ட மாட்டான்...! நக்கிட்டுத்தான் போகணும்...! ஆவேசமாக பேசிய விஜய் சேதுபதி

சுருக்கம்

vijay sethupathy controversial speech in kee audio launch

மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் காலிஸ், இயக்கத்தில் ஜீவா, நிக்கி கல்ரானி நடிக்கும் கீ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

இதில் தயாரிப்பாளர் சங்க தலைவரும் நடிகருமான விஷால், விஜய் சேதுபதி, இயக்குநர் காலிஸ், நிக்கி கல்ரானி தயாரிப்பாளர்கள் பி.எல்.தேனப்பன் மைக்கேல் ராயப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது 'வல்லவன்' பட தயாரிப்பாளரான தேனப்பன் பேசும் போது சிம்புவின் மீது மைக்கேல் ராயப்பன் புகார் கொடுத்தும் சிம்பு மீது விஷால் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். 


அப்போது கூட்டத்திலிருந்து' வின்னர்' படத்தின் தயாரிப்பாளர் பொது இடத்தில் இப்படி பேசுவது தவறு என கூச்சல் போட்டார். தொடர்ந்து அவர் கூச்சல் போட்டதால் அவரை விழாவிலிருந்து வெளியேற்றினர். இதனால் விழாவிலிருந்து விஜய் சேதுபதி வெளியேற முயன்றார். அவரை சமாதானப்படுத்தி பேச அழைத்தனர். 

அப்போது பேசிய அவர் நம்முடைய பிரச்சனையை நாம்தான் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். பொது இடங்களுக்கு வந்து சண்டை போட்டு கொள்ள கூடாது. 

இப்போதெல்லாம் சினிமாக்காரர்கள் என்றாலே ஒரு மாறி பார்க்கிறார்கள். தரம் தாழ்ந்து பேசுகிறார்கள். மொத்தமாக சினிமாக்காரர்களை கை காட்டி பேசும் போது வருத்தமாக இருக்கிறது.



சினிமாக்காரர்களை குறை சொல்பவர்கள் ஒருதடவை வந்து சினிமா எடுத்து பாருங்கள். தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர்களுக்குரிய  பிரச்சனை அப்போதுதான் தெரியும். ஒரு படம் எடுத்து முடிக்கும் போது உயிர் போய் உயிர் வருகிறது.

படம் எடுக்க முயற்சிக்கும் தயாரிப்பாளர்களை நாம் பாராட்ட வேண்டும். அந்த படம் ஓடவில்லையென்றால் அவருக்குத்தான் அதிக பாதிப்பு. 

நான்கு படங்கள் ஓடவில்லையென்றால் யாரும், யார் வீட்டுப் பக்கமும் வர மாட்டார்கள்.  நடிகனை சீண்ட மாட்டார்கள். அப்போது நடிகன் என்ன கத்தி பேசினாலும் கண்டுக்கொள்ள மாட்டார்கள். படம் வெற்றியடைந்தால், ஓடிக்கொண்டே இருந்தால்தான் மதிப்பு. 



"பவர்" வைத்துதான் இங்கு மரியாதை. அதுவும் போய் விட்டால், நாம் சோர்ந்து விட்டால் அந்த இடத்திற்கு இன்னொருவன் வருவான். அப்புறம் நாம் நக்கிட்டுத்தான் போகணும். நான் அனுபவத்தில், அறிவில் சின்ன பையன் தப்பாக பேசியிருந்தால் மன்னித்து விடுங்கள் என்று பேசி முடித்தார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஒசூரில் கடும் குளிரிலும் சால்வையை போர்த்திக் கொண்டு ஒத்திகை; இளையராஜாவின் செயலை வியந்த டீம்!
அப்பாவாக போகும் நாக சைதன்யா; சமந்தாவுக்கு கொடுக்கும் அதிரடி ஷாக்!