“இந்த சாத்தான்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்”.... சாத்தான்குளம் சம்பவத்தால் கொதித்தெழுந்த நடிகர் விஜய் அப்பா!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jul 02, 2020, 04:18 PM IST
“இந்த சாத்தான்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்”.... சாத்தான்குளம் சம்பவத்தால் கொதித்தெழுந்த நடிகர் விஜய் அப்பா!

சுருக்கம்

அதை மறக்கவும் முடியாது. மறுக்கவும் கூடாது. அப்படிப்பட்ட போலீஸ் துறையில் இப்படிப்பட்ட கொடுமைக்காரர்களா?.  இந்த சாத்தான்கள் உடனடியாக கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோர் செல்போன் கடை நடத்தி வந்தனர். ஊரடங்கு நேரத்தில் கூடுதல் நேரம் கடையை திறந்து வைத்ததற்காக போலீசார் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து காவல் நிலையத்தில் வைத்து தந்தை, மகனை கொடூரமாக தாக்கிய போலீசார், மறுநாள் கோவில் பட்டி கிளை சிறையில் அடைத்துள்ளனர். சிறையில் அடைக்கப்பட்ட அப்பா மற்றும் மகன் உடல்நலக் கோளாறு காரணமாக இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

 

இதையும் படிங்க: பிரபல தொகுப்பாளினி டிடி-யை ஓங்கி அறைந்த தீனா... வைரல் வீடியோவால் டென்ஷனான ரசிகர்கள்...!

ஆனால் போலீசாரின் தாக்குதலால் தான் ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தந்தை, மகனின் இந்த கொடூர மரணத்திற்கு நீதி கேட்டு தமிழக மக்கள் கொந்தளித்து வருகின்றனர். எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தொடங்கி சூப்பர் ஸ்டார் ரஜினி வரை இந்த விவகாரத்தில் குரல் கொடுத்தனர். இந்நிலையில், இவ்வழக்கு விசாரணையை தமிழகஅரசு, மதுரை உயர்நீதிமன்ற ஒப்புதலுடன் சி.பி.ஐ வசம் ஒப்படைத்தது. சி.பி.ஐ இவ்வழக்கை கையில் எடுக்கும் வரை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. 

 

இதையும் படிங்க:  “அது கல்யாணமே இல்ல”... உண்மையை ஓபனாக போட்டுடைத்த வனிதா வக்கீல்...!

இந்த வழக்கு தொடர்பாக எஸ்.ஐ.ரகு கணேஷ், ஸ்.ஐ., பாலகிருஷ்ணன், ஆய்வாளர் ஸ்ரீதர், தலைமைக் காவலர் முருகன், முத்துராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தையே கொதிப்படையச் செய்த இந்த கொடூர சம்பவம் குறித்து நடிகர் விஜய்யின் அப்பாவும், பிரபல இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

 

இதையும் படிங்க:  “பயங்கரமான குடிகாரர் பீட்டர் பால்”... முகத்திரையை கிழிக்கும் முதல் மனைவி...!

அதில், கொரோனாவை கொடிய வைரஸ் என்று சொல்கிறார்கள். ஆனால் அந்த கொடிய வைரஸிடம் இருந்து கூட பலர் உயிர் பிழைத்து வந்துவிடுகிறார்கள். சாத்தான்குளம் சம்பவத்தை கேள்விப்படும் போது, இப்படிப்பட்ட போலீசாரிடம் மாட்டிக்கொண்டால் என்ன ஆகும்  என நினைக்கும் போதே ஈரக்கொலை நடுங்கிறது. இந்த கொரோனா காலத்தில் எத்தனை காவலர்கள் கடவுளுடைய பிரதிநிதிகளாக பணியாற்றுகிறார்கள். அதை மறக்கவும் முடியாது. மறுக்கவும் கூடாது. அப்படிப்பட்ட போலீஸ் துறையில் இப்படிப்பட்ட கொடுமைக்காரர்களா?.  இந்த சாத்தான்கள் உடனடியாக கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இவர்களை காப்பாற்ற நினைக்கும் யாரையும் மக்கள் மன்னிக்கமாட்டார்கள்” என தெரிவித்துள்ளார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?