விஜய்க்கு எதிராக இறுகும் பிடி... ரசிகர் மன்றத்தினர் மீது குவியும் வழக்குகள்...

Published : Nov 09, 2018, 10:58 AM IST
விஜய்க்கு எதிராக இறுகும் பிடி... ரசிகர் மன்றத்தினர் மீது குவியும் வழக்குகள்...

சுருக்கம்

தகுந்த போலிஸ் பாதுகாப்புடன் தமிழகம் முழுவதுமுள்ள தியேட்டர்களில் உள்ள பேனர், கட் அவுட்களை அ.தி.மு.க.வினர் கிழித்து எரித்து வரும் நிலையில், அவர்களை எதுவும் செய்யாத காவல்துறை வரிசையாக விஜய் ரசிகர் மன்றத்தினர் மீது மட்டும் தொடர்ந்து வழக்குகள் பதிவு செய்து வருகிறது. இனி கனவில் கூட விஜய்க்கு அரசியல் ஆசை வரக்கூடாது என்னும் நோக்கில் அரசு தரப்படும் நேரடி நெருக்கடியாகவே இது கருதப்படுகிறது.  

தகுந்த போலிஸ் பாதுகாப்புடன் தமிழகம் முழுவதுமுள்ள தியேட்டர்களில் உள்ள பேனர், கட் அவுட்களை அ.தி.மு.க.வினர் கிழித்து எரித்து வரும் நிலையில், அவர்களை எதுவும் செய்யாத காவல்துறை வரிசையாக விஜய் ரசிகர் மன்றத்தினர் மீது மட்டும் தொடர்ந்து வழக்குகள் பதிவு செய்து வருகிறது. இனி கனவில் கூட விஜய்க்கு அரசியல் ஆசை வரக்கூடாது என்னும் நோக்கில் அரசு தரப்படும் நேரடி நெருக்கடியாகவே இது கருதப்படுகிறது.

சர்கார் படத்திற்கு அனுமதியின்றி பேனர் வைத்ததாக இதுவரை தஞ்சை - 25 பேர், திருவாரூர் - 24 பேர், நாகை - 20 பேர், கரூர் - 10, திருச்சி - 4 பேர், புதுக்கோட்டை - 4 பேர் என மொத்தம் 87 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில்  எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்பதால் விஜய் ரசிகர் மன்றத்தினர் பலரும் தலைமறைவாக உள்ளனர்.

பேனர், கட் அவுட்கள் வைக்க ஒரு தியேட்டருக்கே சில லட்சங்கள் ஆகும் எனும்போது தமிழகம் முழுக்க நாசம் செய்யப்பட்ட எரிக்கப்பட்ட பேனர்களின் மதிப்பு சில கோடிகளாக இருக்கக்கூடும் என்கிறது சர்கார் விநியோகஸ்தர் தரப்பு.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கார் விபத்து: நடுரோட்டில் பஞ்சாயத்தை முடித்து வைத்த சிவகார்த்திகேயன்! ரியல் லைஃப் 'அமரன்' என பாராட்டும் ரசிகர்கள்!
கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்