
மலையாள திரையுலகில் நடிராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் விஜய் பாபு. இவர் மீது புதுமுக நடிகை ஒருவர் அண்மையில் பாலியல் புகார் ஒன்றை தெரிவித்தார். அதன்படி விஜய் பாபு தனக்கு பட வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரை அடுத்து சில நாட்கள் தலைமறைவாக இருந்த நடிகர் விஜய் பாபு, அண்மையில் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகினார், அப்போது நடிகையின் சம்மதத்துடன் தான் எல்லாம் நடந்தது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் விஜய்பாபு. இந்த வழக்கை சட்ட ரீதியாக எதிர்கொண்டு தான் ஒரு நிரபராதி என நிரூபிப்பேன் என அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், விஜய் பாபு மீது வழக்கு தொடர்ந்த நடிகை தற்போது மேலும் ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதன்படி விஜய் பாபு தரப்பில் இருந்து அவரது நண்பர் ஒருவர் தன்னை தொடர்பு கொண்டு இந்த வழக்கை வாபஸ் பெறுமாறு கூறினார். நான் முடியாது என மறுத்தேன். உடனே ஒரு கோடி ரூபாய் தருவதாக பேரம் பேசினார்.
நான் அவரிடம் முடியவே முடியாது என உறுதியாக சொல்லிவிட்டேன். இதையடுத்து தான் அவர் போனை கட் செய்தார் என அந்த நடிகை கூறியிருக்கிறார். நடிகர் விஜய் பாபு பேரம் பேசிய விவகாரம் மலையாள திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. நெட்டிசன்கள் அவரது செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... Suriya 41 : சூர்யா - பாலா படத்தின் பாடல் காட்சி இணையத்தில் லீக் ஆனதா?... வைரல் வீடியோவின் பின்னணி இதுதான்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.