
தேமுதிக கட்சியின் தலைவரும், முன்னாள் நடிகர் சங்க தலைவருமான நடிகர் விஜயகாந்த் அவர்கள் நேற்று டிசம்பர் 28ஆம் தேதி மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலைகள் காலமானார், அவருக்கு வயது 71. திரைத்துறை சார்ந்த பல பிரபலங்களும் தங்களுடைய இறுதி அஞ்சலியை நடிகர் விஜயகாந்த் அவர்களுக்கு நேரில் சென்று செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
நேற்று இரவு நடிகர் விஜய் அவர்கள், இறந்த விஜயகாந்தின் பூத உடலை பார்த்து கண் கலங்கி நின்ற காட்சி காண்போரை நெஞ்சை உலுக்கும் வண்ணம் இருந்தது. இந்நிலையில் இன்று காலை தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு சென்னை வந்த நடிகர் ரஜினிகாந்த் அவர்கள், நேரடியாக விஜயகாந்த் உடலை பார்த்து மனம் உருகி தனது இறுதி அஞ்சலியை அவருக்கு செலுத்தினார்.
பின்பு செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த் அவர்கள், அரசியல்வாதிகள், ஊடக நண்பர்கள் என்று பலரை அவர் கோபமாக பேசியதுண்டு, ஆனால் பதிலுக்கு அவர் மீது யாரும் கோபப்பட்டது இல்லை. காரணம் அவருடைய கோபத்தில் ஒரு நியாயம் இருக்கும், எப்பொழுதும் சுயநலம் இருக்காது என்று தனது நண்பரின் இறப்புக்கு அவர் இரங்கல் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நடிகர் விஜயகாந்தின் சமகாலத்து நடிகரும், தமிழ் திரையுலகின் மூத்த கலைஞருமான மைக் மோகன் அவர்கள் தற்பொழுது ஒரு காணொளியை வெளியிட்டு இருக்கிறார். அதில் முரட்டுத்தனமான தைரியம் கொண்டவர் நடிகர் விஜயகாந்த் என்று கூறியுள்ளார். ஏழை, பணக்காரன் மற்றும் ஜாதி பிரிவினை என்று எதுவுமே அவர் அகராதியிலேயே கிடையாது என்றும் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இன்று மாலை விஜயகாந்த் அவர்களுடைய உடல் தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.