
தமிழ் சினிமாவில் பிரபலங்களின் அடுத்தடுத்த மரணம் பெருச்சோகத்தை உருவாக்கி வருகிறது. தற்போது பழம் பெரும் நடிகையான ஜெமினி ராஜேஸ்வரி இன்று காலை காலமானார் என்ற செய்தி திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. காரைக்குடியை பூர்வீகமாக கொண்ட ராஜேஸ்வரி, நாடக மேடைகள் மூலமாக திரையுலகில் அறிமுகமானவர். 1000க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளார்.
“ஈறைப் பேனாக்கி, பேனைப் பெருமாளாக்கிறவளாச்சே” என்ற பழமொழி வார்த்தையைக் காந்திமதியை அர்ச்சித்து ’16 வயதினிலே’ படத்தில் வரும் ஒற்றை வசனம் மூலமாக இன்று அந்த படத்தை பார்த்தாலும் ரசிகர்களை ஈர்க்க வைக்கும். கவர்ச்சி வில்லன் கே.கண்ணனின் ‘கண்ணும் இமையும்’ நாடகத்தில் இவர் நடித்தபோது அதைப்பார்த்த இயக்குநர் ஜோசப் தளியத் ‘காதல் படுத்தும் பாடு’ படத்தில் ஒரு வாய்ப்பை இவருக்கு அளித்தார்.
16 வயதினிலே, மண் வாசனை உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் நடித்து வெளியான ‘எதிர் நீச்சல்’, மற்றும் கயல் படங்களிலும் நடித்துள்ளார். 95 வயதான ஜெமினி ராஜேஸ்வரி இன்று காலை மரணமடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவருடைய மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.