Bharathi kannamma : அடக்கடவுளே வெண்பாவை போட்டு தள்ள பாக்குறாங்களே....இப்பதானப்ப வந்தாங்க அதுக்குள்ளையுமா?..

Kanmani P   | Asianet News
Published : Jan 22, 2022, 11:05 AM IST
Bharathi kannamma : அடக்கடவுளே வெண்பாவை போட்டு தள்ள பாக்குறாங்களே....இப்பதானப்ப வந்தாங்க அதுக்குள்ளையுமா?..

சுருக்கம்

 Bharathi kannamma : கொடூரமாக யோசிக்கும் வெண்பா தூக்கு மாட்டி கொள்வது போன்ற காட்சியமைக்கப்படவுள்ளது.. ஏற்கனவே கண்ணம்மா தனக்கு துரோகம் பண்ணி விட்டதாக எண்ணி கடுமையான மனக்குழப்பத்தில் இருக்கும் பாரதி வெண்பாவின் இந்த செயலால் வெண்பா பக்கம் மீண்டும் திரும்பலாம் என தெரிகிறது...  

விஜய் தொலைக்காட்சியில் அதிக ரசிகர்களை கவர்ந்த சீரியல்களில் பாரதி கண்ணம்மா தனி இடம் பிடித்துள்ளது. மீம்ஸ் கிரியேட்டர்களால் ட்விட்டர் ட்ரெண்டிங்கையே தெறிக்கவிடும் அளவிற்கு பிரபலமான சீரியல் ‘பாரதி  கண்ணம்மா’ தொடராக மட்டுமே இருக்க முடியும். விஜய் டி.வி. டி.ஆர்.பி. ரேட்டிங்கிலும் டாப்பில் உள்ளது. 

இதில் ஹீரோயின் கண்ணம்மாவாக நடித்து வரும் ரோஷினி ஹரிபிரியனுக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் பட்டாளம் உண்டோ, அதே அளவிற்கு வில்லி வெண்பாகவாக நடித்து வரும் பரீனாவிற்கும் ரசிகர்கள் எக்கச்சக்கம். சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் பரீனா, சீரியல் குறித்த ரசிகர்களின் கேள்விகளுக்கு கூட சளைக்காமல் பதில் கொடுத்து வருபவர்.

இதற்கிடையே வெண்பாவாக வந்த பரினா கர்ப்பமாக இருந்தார். அவரது வலை காப்பு வீடியோ சமூக வலைதளத்தில் பெரும்பாலனோர் பார்த்திருந்தனர். இதை தொடர்ந்து நிறை மாத கர்ப்பிணியான பரினா நீருக்கடியில் எடுத்திருந்த போட்டோ ஷுட் அனைவரின் கவனத்தையம் ஈர்த்திருந்தது. வயிற்றில் குழந்தையுடன் தொடர்ந்து பரினா பாரதி கண்ணம்மாவில் நடித்து வந்தார். பிரசவ காலம் நெருங்கியதை ஒட்டி வெண்பா சிறையிலேயே இருப்பது போகின்ற கட்சியை படமாக்கி விட்டு பரினா சிரியலிருந்து சிறுது காலம் ஒதுங்கி இருக்க முடிவு செய்திருந்தார். ஒரே சமயத்தில் (கண்ணம்மா) ரோஷினி, (வெண்பா) பரினா இருவரும் நாடகத்தை விட்டு விலகியது ரசிகர்ளுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்தது. 

பின்னர் பரினாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. சிறிது காலம் ஓய்வில் இருந்த பிறகு மீண்டும் பாரதிகண்ணம்மா சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ளார். அவ்வாறு என்ட்ரி கொடுத்த வெண்பா சிறையிலிருந்து ஜாமினில் வெளிவந்ததாக கட்டப்பட்டது.. ஆனால் அஞ்சலிக்கு தவறான மருந்துகளை பரிந்துரைத்தால் வெண்பாவின் மீது கடும் கோபத்தில் இருக்கும் பாரதி வெண்பாவை புறக்கணித்து வருகிறார்.. 

இதன் காரணமாக கொடூரமாக யோசிக்கும் வெண்பா தூக்கு மாட்டி கொள்வது போன்ற காட்சியமைக்கப்படவுள்ளது.. ஏற்கனவே கண்ணம்மா தனக்கு துரோகம் பண்ணி விட்டதாக எண்ணி கடுமையான மனக்குழப்பத்தில் இருக்கும் பாரதி வெண்பாவின் இந்த செயலால் வெண்பா பக்கம் மீண்டும் திரும்பலாம் என தெரிகிறது...

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?