vairamuthu : நாய்களை கண்டுகொள்ளாதீர்கள்... அதுவே ஓடிவிடும் - மீடூ சர்ச்சை குறித்து மெளனம் கலைத்த வைரமுத்து

Published : Apr 20, 2022, 08:44 AM IST
vairamuthu : நாய்களை கண்டுகொள்ளாதீர்கள்... அதுவே ஓடிவிடும் - மீடூ சர்ச்சை குறித்து மெளனம் கலைத்த வைரமுத்து

சுருக்கம்

vairamuthu : விமர்சனங்களுக்கெல்லாம் பதில் சொல்ல ஆரம்பித்தால், நாயோடு போராடுவது போலேயே வாழ்க்கை போய்விடும் என கவிஞர் வைரமுத்து கூறி உள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி பாடலாசிரியராக வலம் வருபவர் வைரமுத்து. இவர் மீது பிரபல பின்னணி பாடகியான சின்மயி, பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார். வைரமுத்து மீது பாடகி சின்மயி தொடர்ந்து மீடூ புகார்களை முன்வைத்து வந்தாலும், இதுவரை சட்ட ரீதியாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த விவகாரம் குறித்து எந்தவித கருத்துக்களையும் தெரிவிக்காமல் மெளனம் காத்து வந்த வைரமுத்து, சமீபத்திய பேட்டியில் இதுகுறித்து முதன்முறையாக பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது: “உங்களைத் துரத்தும் நாயைக் கண்டுகொள்ளாமலே செல்ல வேண்டும். இல்லையெனில் அது உங்களைத் துரத்திக் கொண்டே வரும். 

விமர்சனங்களுக்கெல்லாம் பதில் சொல்ல ஆரம்பித்தால், நாயோடு போராடுவது போலேயே வாழ்க்கை போய்விடும். நாயைக் கண்டுகொள்ளாமல் ஓடிக் கொண்டே இருங்கள். நாய்கள் திரும்பி ஓடிவிடும்” எனக் கூறி உள்ளார். இதன்மூலம் தன்மீது வைக்கப்பட்டுள்ள மீடூ குற்றச்சாட்டுகளுக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார் கவிஞர் வைரமுத்து. 

இதையும் படியுங்கள்.... Cobra movie : சுதந்திர தினத்தன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் விக்ரமின் ‘கோப்ரா’?

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?