தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தில் புதிய தலைவராக வாகை சந்திரசேகர் நியமனம்..! முதலமைச்சர் அதிரடி..!

By manimegalai aFirst Published Aug 15, 2021, 1:43 PM IST
Highlights

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் புதிய தலைவராக பிரபல நடிகரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான வாகை சந்திரசேகரை நியமனம் செய்துள்ளார் தமிழ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
 

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் புதிய தலைவராக பிரபல நடிகரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான வாகை சந்திரசேகரை நியமனம் செய்துள்ளார் தமிழ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

சுமார் 40 ஆண்டுகளாக திரையுலகில் முன்னணி நடிகராகவும், அரசியல்வாதியாகவும், அறியப்படும் வாகை சந்திரசேகரை இயல், இசை, நாடக, மன்றத்தின் தலைவராக தற்போது முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளதை தொடர்ந்து இவருக்கு பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

திரையுலகில் சுமார் 300 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள வாகை சந்திரசேகர், 80 மற்றும் 90களில் ரசிகர்களின் மனதை கவரும் விதமான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து பிரபலமானவர். மேலும் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான 'நண்பா நண்பா' என்கிற திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார். கலைமாமணி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளுக்கு சொந்தக்காரர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2021 வரை வேளச்சேரி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். தாற்போது இயல், இசை, நாடக மன்ற தலைவராக இருக்கும் இசையமைப்பாளர் தேவாவின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், இவருக்கு பதில் வாகை சந்திரசேகரை புதிய தலைவராக நியமனம் செய்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.  இவர் தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத்தின் தலைவர் பொறுப்பையும் வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!