"ஒரு ஆணியும்...முடியாது"... விதவிதமாய் போஸ்டர் ஒட்டி...அடுத்த ஐ.டி. ரெய்டுக்கு அலார்ட் செய்யும் விஜய் ஃபேன்ஸ்!

By Kanimozhi PannerselvamFirst Published Feb 17, 2020, 12:58 PM IST
Highlights

இதையடுத்து விஜய்யை தேவையில்லாமல் சீண்டுபவர்களை எச்சரிக்கும் விதமாக விஜய் ரசிகர்கள் அங்காங்கே போஸ்டர் ஒட்டி வருகின்றனர். 
 

சமீப காலமாக நடிகர் விஜய்யின் படம் வெளியாகும் போதெல்லாம் அவர் மீதான அரசியல் எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது. அதற்கேற்றாற்போல் படம் வெளியாகும் முன்பு நடைபெறும் பாடல் வெளியீட்டு விழாக்களில் அரசியல் நெடியுடன் விஜய் பேசி வருவது அவரது ரசிகர்களை செம்ம ஹாப்பியாக்குகிறது. 

இதையும் படிங்க: படுகவர்ச்சி உடையில்... பேஷன் ஷோவில் ஒய்யார நடைபோட்ட ”மாஸ்டர்” பட நாயகி...வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்...!


இந்நிலையில் நெய்வேலியில் மாஸ்டர் பட ஷூட்டிங்கில் இருந்த விஜய்யை ஷூட்டிங் ஸ்பார்ட்டிற்கே சென்று அலேக்காக தூக்கிய வருமான வரித்துறையினர். சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பிகில் பட சம்பளம் தொடர்பாக ரெய்டு நடப்பதாக ஐ.டி. அதிகாரிகள் கூறினாலும், அதற்கு பின்னால் பல அரசியல் காரணங்கள் இருப்பதாக ரசிகர்கள் கொந்தளித்தனர். 

24 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சோதனையில் விஜய் வீட்டில் இருந்து எதுவும் சிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து நெய்வேலி ஷூட்டிங்கிற்கு சென்ற விஜய்., ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்து எல்லாம் தனிக்கதை. இதையடுத்து விஜய்யை தேவையில்லாமல் சீண்டுபவர்களை எச்சரிக்கும் விதமாக விஜய் ரசிகர்கள் அங்காங்கே போஸ்டர் ஒட்டி வருகின்றனர். 

இதையும் படிங்க: கடலையே கொந்தளிக்க வைத்த கஸ்தூரி... கடற்கரையில் செம்ம ஹாட்டாக போட்டோ ஷூட் நடத்தி அதகளம்...!

தற்போது மதுரை சோழவந்தான் பகுதியில் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் பரபரப்பை கிளப்பியுள்ளது. அதில் ஒரு ஆணியும்... முடியாது... தண்ணீல வளர்ந்த தவளை கூட்டம் அல்ல... தளபதியின் அன்பால் வளர்ந்த பாசக்கூட்டம் என்று குறிப்பிட்டுள்ளனர். 

இதையும் படிங்க: ரெட் கலர் புடவையில் செம்ம ஹாட்... சேலை நழுவ போஸ் கொடுத்ததால் யாஷிகா உடம்பில் அப்பட்டமானது ரகசியம்..!

மேலும் அந்த போஸ்டரில் டெல்லி தேர்தலில் வெற்றி பெற்ற அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். விஜய்யை அரசியலோடு தொடர்புபடுத்தி விதவிதமாய் போஸ்டர் ஒட்டுவது நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. 
 

click me!