ஈசிஆரில் விறுவிறுப்பு... சத்தமே இல்லாமல் தீயாய் வேலை செய்யும் விஜய்...!

By Kanimozhi PannerselvamFirst Published Aug 2, 2021, 6:02 PM IST
Highlights

இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டூடியோவில் பிரம்மாண்ட செட் அமைத்து, அதன் படப்பிடிப்பும் நிறைவடைந்தது.


மாஸ்டர் படத்தின் சூப்பர் டூப்பர் வெற்றியைத் தொடர்ந்து தளபதி விஜய் ‘கோலமாவு கோகிலா’ படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்துக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். தளபதி 65 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் பீஸ்ட் என பெயரிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகின. 

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நிறைவடைந்தது. தேர்தலுக்காக காத்திருந்த படக்குழு கடந்த ஏப்ரல் 6ம் தேதி, தேர்தல் முடிவடைந்தவுடன் இரவு படக்குழுவினர் அனைவருமே ஜார்ஜியா கிளம்பிச் சென்றனர். ஏப்ரல் 9-ம் தேதி ஜார்ஜியாவில் தொடங்கியது. முதல் மூன்று நாட்கள் மழையால் கஷ்டப்பட்ட படக்குழு ஒருவழியாக வெற்றிகரமாக படப்பிடிப்பை நிறைவு செய்துவிட்டு சென்னை திரும்பியது.  

இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டூடியோவில் பிரம்மாண்ட செட் அமைத்து, அதன் படப்பிடிப்பும் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து 10 நாட்கள் ஓய்வெடுத்த விஜய், இன்று சென்னை ஈசிஆரில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார். இங்கு சில காட்சிகளை படமாக்கிய பின்னர், அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக பீஸ்ட் படக்குழு ரஷயா செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

click me!