
கமலை பிரிந்து சில நாட்கள் வருத்தத்துடன் காண பட்ட நடிகை கௌதமி, சமீப காலமாக சமூக சேவை மற்றும் அரசியல் சம்பந்தமான சில விஷயங்களில் தீவிர ஈடுபாடு காண்பித்து வருகிறார்.
அதனால் தற்போது நிலவி வரும் அரசியல் சூழல் குறித்தும் அவ்வப்போது தன்னுடைய கருத்துக்களை ட்விட்டர் மூலம் தெரிவித்து வருகிறார்.
முதலமைச்சர் பன்னீர் செல்வம் மௌனம் கலைத்து, பல அதிர்ச்சி தகவலை வெளியிட்ட போது, இதற்கு தான் இப்படி பட்ட ஒரு மனிதரை அம்மா தேர்தெடுத்துள்ளார் என்று புகழ்ந்து தள்ளிவிட்டார்...
தற்போது மேலும் ஒரு ட்விட் செய்துள்ளார் அதில் 'அம்மாவை தேர்வு செய்த மக்களின் விருப்பத்தை, தமிழக ஆளுநர் காப்பர் என நம்புகிறேன். மேலும் ஓபிஎஸ் தான் முதல்வர், நீதிக்காவ தமிழ்நாடு தொடர்ந்து போராடும் என்பது போலவும், இது நமது போராட்டம் என்றும் பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.