சுஷாந்த் வங்கி கணக்கில் இருந்து பல கோடி அபேஸ்... காதலி ரியா சக்ரபர்த்திக்கு அமலாக்கத்துறை சம்மன்...!

By Kanimozhi PannerselvamFirst Published Aug 6, 2020, 11:48 AM IST
Highlights

இதனிடையே பாட்னா போலீசில் பதிவு செய்யப்பட்ட வழக்கை மும்பையில் விசாரிக்க உத்தரவிடக்கோரி ரியா சக்ரபர்த்தி உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். 

பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வந்த சுஷாந்த் சிங் ராஜ்புட் ஜூன் 14ம் தேதி மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நடிகர் சுஷாந்த் உயிரிழந்து ஒன்றரை மாதம் ஆன நிலையில் தற்போது அவரின் தந்தை கே.கே.சிங், சுஷாந்தை தற்கொலைக்கு தூண்டியதாக ரியா சக்ரபர்த்தி மீது புகார் கூறியிருந்தார். இதையடுத்து தற்கொலைக்கு உதவுதல், தவறாக வழிநடத்துதல், தவறான கட்டுப்பாடு, வீட்டில் திருட்டு, மோசடி, கிரிமினல், நம்பிக்கையை மீறிய செயல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த பீகார் போலீசார் தீவிர விசாரணையை தொடங்கினர். 

 

இதையும் படிங்க: டாப்லெஸில் தாறுமாறாக போஸ் கொடுத்த ஹன்சிகா... குஷியான ரசிகர்களுக்கு விழுந்த குட்டு...!

மேலும் அந்த புகாரில் ரியா தன் மகனின் வங்கி கணக்கில் இருந்து ரூ.15 கோடி வரை மாற்றியுள்ளதாகவும், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தியுள்ளதாகவும் குற்றச்சாட்டியிருந்தார். மொத்தமாக சுமார் 50 கோடி வரை ரியா சக்ரபர்த்தி மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான விசாரணைக்கு நாளைக்கு ஆஜராகும் படி ரியா சக்ரபர்த்திக்கு அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. நாளை காலை 11.30 மணி அளவில் மும்பையில் உள்ள அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. 

 

இதையும் படிங்க: படுக்கையில் ஆண் நண்பருடன் அமலா பால்... பீர் பாட்டிலுடன் பார்ட்டி கொண்டாட்டம்... சர்ச்சையை கிளப்பும் போட்டோஸ்!

இதனிடையே பாட்னா போலீசில் பதிவு செய்யப்பட்ட வழக்கை மும்பையில் விசாரிக்க உத்தரவிடக்கோரி ரியா சக்ரபர்த்தி உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பாட்னா போலீசார் தனனி விசாரிக்க கூடாது என்றும், அதிலிருந்து இடைக்கால பாதுகாப்பு தரும் படியும் கேட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ரியா சக்ரபர்த்தியின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. இதனால் ரியா சக்ரபர்த்தியை கைது செய்ய விதிக்கப்பட்ட தடை விலகிய நிலையில், அவர் தலைமறைவானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

click me!