என்னோட வாழ்க்கையில் நடந்தது தான் வெண்ணிலா கபடி குழு திருவிழா கதை – இயக்குநர் சுசீந்திரன்!

Published : Dec 27, 2024, 01:17 PM IST
என்னோட வாழ்க்கையில் நடந்தது தான் வெண்ணிலா கபடி குழு திருவிழா கதை – இயக்குநர் சுசீந்திரன்!

சுருக்கம்

Suseenthiran Talk About  Vennila Kabadi Kuzhu Story : என்னுடைய வாழ்க்கையில் நடந்த கதை தான் வெண்ணிலா கபடி குழு என்று இயக்குநர் சுசீந்திரன் கூறியிருக்கிறார்.

Suseenthiran Talk About  Vennila Kabadi Kuzhu Story : தமிழில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குநர் சுசீந்திரன். வெண்ணிலா கபடி குழு படம் மூலமாக இயக்குராக அவதாரம் எடுத்தார். நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை, ராஜபாட்டை, ஆதலால் காதல் செய்வீர், பாண்டிய நாடு, ஜீவா, மாவீரன் கிட்டு, நெஞ்சில் துணிவிருந்தால், ஜீனியஸ், கென்னடி கிளப், ஈஸ்வரன், குற்றம் குற்றமே உள்ளிட்ட பல படங்களை இயக்கினார். இயக்குநாரக மட்டுமின்றி ஒரு சில படங்களில் நடிக்கவும் செய்தார். நாம், தீபாவளி, சுட்டு பிடிக்க உத்தரவு, மார்கழி திங்கள் போன்ற படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார்.

உயிர், உலக் தூங்கும் போது காதில் நயன்தாரா சொல்லும் ரகசியம் என்ன? குழந்தையை எப்படி வளர்க்கணும்?

இந்த நிலையில் வெண்ணிலா கபடி குழு படம் பற்றி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் கூறியிருக்கிறார். இது குறித்து அவர் என்ன கூறியிருக்கிறார் என்று பார்க்கலாம். வெண்ணிலா கபடி குழு, கென்னடி கிளப், ஜீவா, வெண்ணிலா கபடி குழு 2 போன்ற விளையாட்டு தொடர்பான கதைகளை நான் இயக்கி இருக்கிறேன். எனக்கு மற்ற விளையாட்டுகளை விட கபடி ரொம்பவே பிடிக்கும். என்னுடைய வீட்டில் அப்பா, அண்ணன் என்று எல்லோரும் கபடி வீரர்கள். அதனால் என்னுடைய படங்களில் கபடிக்கு முக்கியத்துவம் இருந்தது. அதுமட்டுமின்றி விளையாட்டையும் தாண்டி காதலுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. எப்படி கொடுத்து எடுக்கப்பட்ட படம் தான் வெண்ணிலா கபடி குழு. இந்த படத்தின் வரும் திருவிழா சீன் கூட என்னுடைய வாழ்க்கையில் நடந்தது. இப்படி என்னை சுற்றி நடைபெற்ற பல சம்பவங்களைத் தான் நான் படமாக கொடுத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார். கடைசியாக 2கே லவ் ஸ்டோரி என்ற படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கு கத்துக்கிட்டு நான் என்ன பண்ண போறேன்னு சொல்லிட்டேன் - நடிகர் ஜீவா!

திண்டுக்கல், பழநி அருகிலுள்ள அமரபூண்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் இயக்குநர் சுசீந்திரன். திரைப்படங்கள் மீதான காதல் காரணமாக சினிமாவில் அறிமுகமானார். சுசீந்திரனுக்கு முன்னதாக அவருடைய அப்பா மற்றும் மாமா ஆகியோர் சினிமா துறையில் இருந்தனர். அதுவும் இயக்குநராக இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், ஒரு படத்தை கூட இயக்கவில்லை. இதன் காரணமாக, சுசீந்திரனும் இயக்குநராக வருவது அவரது குடும்பத்திற்கு பிடிக்கவில்லை. ஆனால், ஒரு நாள் எப்படியும் இயக்குநராக அவதாரம் எடுப்பேன் என்ற நம்பிக்கையில் சென்னைக்கு வந்தார்.

மகனின் மறைவுக்கு பிறகு இரட்டை குழந்தைகளை பெற்றுக் கொண்ட மறைந்த நடிகர் விவேக்! மனைவி பகிர்ந்த சீக்ரெட்!

சுசீந்திரன் 18 வயதாக இருந்த போது முதல் படத்திற்கு அவருக்கு 12 வருடங்கள் தேவைப்பட்டுள்ளது. ஆரம்ப காலகட்டங்களில் அசிஸ்டண்ட் இயக்குநராக இருந்துள்ளார். இயக்குநர் எழில்மாறன் மற்றும் சபாபதி தக்‌ஷிணாமூர்த்தி ஆகியோரிடம் உதவி இயக்குநராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் சுசீந்திரனுக்கு பேரும் புகழும் எப்படி வெண்ணிலா கபடி குழு கொடுத்ததோ அதே போன்று சூரிக்கு நல்ல அடையாளத்தையும் இந்தப் படம் கொடுத்தது. இந்த படத்தின் மூலமாக பரோட்டா சூரியாக அறியப்பட்டார். படத்தில் 50 பரோட்டா சாப்பிட்ட சூரியிடம் எத்தனை பரோட்டா சாப்பிட்டீர்கள் என்று இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் விடுதலை பார்ட் 2 பட புரோமோஷன் நிகழ்ச்சியில் கேட்டார். அதற்கு சூரி 13 புரோட்டா மட்டுமே சாப்பிட்டதாக கூறினார். அந்த சீசனுக்காக நான் காலை முதல் சாப்பிடவே இல்லை என்றும் கூறினார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?