
திரைக்கு வருகிறது. மெர்சலுக்குப் பிறகு அரசியல் பேசும் படமாக இந்தப் படம் அமைந்திருக்கிறது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரிக்கிறார்.
மேலும் இந்தப் படத்தில் கார்த்தி, ரம்யா கிருஷ்ணன், செந்தில், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். தெலுங்கில் "கேங்" என்ற பெயரில் வெளியாகும் இப்படம் கேரளாவிலும் ரிலீஸாகிறது.
இந்நிலையில், நேற்று கேரளாவில் நடந்த பட புரமோஷன் விழாவில் நடிகர் சூர்யா கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தான் அடுத்ததாக செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கப் போவதாகவும் இந்தப் படத்திற்காக ஒரு வருடமாக இருவரும் கலந்து ஆலோசித்து முடிவெடுத்ததாகவும், கூறினார். தொடர்ந்து பேசிய அவர் அடுத்து கே. வி. ஆனந்த் இயக்கத்தில் நடிக்கப் போவதாகவும், தயாரிப்பாளர் அதிகார பூர்வமாக அறிவித்த பிறகு அதைப் பற்றி பேசலாம் என தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.