மீண்டும் ஹிந்தி படம் இயக்கப் போகிறேன்....பிரபுதேவா தகவல்..

 
Published : Jan 11, 2018, 02:42 PM ISTUpdated : Sep 19, 2018, 01:49 AM IST
மீண்டும் ஹிந்தி படம் இயக்கப் போகிறேன்....பிரபுதேவா தகவல்..

சுருக்கம்

prabudeva turn to direct bollywood movie making

மீண்டும் ஹிந்தி படம் இயக்கப் போவதாக நடிகரும், இயக்குநருமான பிரபுதேவா தெரிவித்து உள்ளார்.

எஸ்.கல்யாண் இயக்கத்தில் பிரபுதேவா ஹன்சிகா நடித்துள்ள படம் குலேபகாவலி. இந்தப் படம் வருகிற பொங்கலன்று திரைக்கு வருகிறது. தேவி படத்திற்குப் பிறகு பிரபுதேவா இப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். அதனால் இந்தப் படத்திற்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நடிகை ஹன்சிகாவிற்கும் பட வாய்ப்புகள் குறைந்ததால் இந்தப் படத்தை பெரிதும் நம்பியுள்ளார். 



குலேபகாவலி படத்திற்குப் பிறகு ஹன்சிகா விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக துப்பாக்கி முனை என்ற படத்தில் நடிக்கிறார்.இந்நிலையில் தற்போது குலேபகாவலி படத்திற்கான புரமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்திக்கான புரமோஷன் வேலைகளில் பிசியாக உள்ளார் பிரபு தேவா. 



அப்போது அவர் பேசியதாவது... படம் இயக்குவது பற்றிய எந்த எண்ணமும் இப்போதைக்கு இல்லை. ஆனால் ஹிந்தியில் மீண்டும் படம் இயக்குவேன். மேலும் சல்மான்கானின் தபாங் 3 படத்திற்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார். ஏற்கனவே பிரபு தேவா இயக்கத்தில் தமிழில் வெற்றி பெற்ற போக்கிரி படத்தின், ஹிந்தி பதிப்பான வாண்டட் படத்தை பிரபுதேவா இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

யார் இந்த அதிரே அபி? மெகா ஸ்டார் பிரபாஸுடன் இவருக்கு இவ்வளவு நெருக்கமா? வைரலாகும் பின்னணி!
15 வருடங்களாக நாகார்ஜுனாவை வாட்டும் நோய்! ஏன் இன்னும் குணமாகவில்லை? கவலையில் ரசிகர்கள்!