இரட்டை சந்தோஷத்தில் சூப்பர் ஸ்டார் குடும்பம்..! ஒரே நாளில் விருதுபெறும் ரஜினி - தனுஷ்!

Published : Apr 02, 2021, 12:22 PM ISTUpdated : Apr 02, 2021, 12:59 PM IST
இரட்டை சந்தோஷத்தில் சூப்பர் ஸ்டார் குடும்பம்..! ஒரே நாளில் விருதுபெறும் ரஜினி - தனுஷ்!

சுருக்கம்

திரையுலகினருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் ஒன்றான, தாதா சாகேப் பால்கே விருதை ரஜினிகாந்துக்கும், தேசிய விருது அறிவிக்கப்பட்ட அவரது மருமகன் தனுஷுக்கும் ஒரே நாளில் விருதுகள்  வழங்கப்படும் என மத்திய அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.  

திரையுலகினருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் ஒன்றான, தாதா சாகேப் பால்கே விருதை ரஜினிகாந்துக்கும், தேசிய விருது அறிவிக்கப்பட்ட அவரது மருமகன் தனுஷுக்கும் ஒரே நாளில் விருதுகள்  வழங்கப்படும் என மத்திய அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்: அடி மனதில் இருந்து நன்றி கூறிய தலைவர்..! உச்சகத்தில் துள்ளி குதிக்கும் ரசிகர்கள்!
 

67வது தேசிய திரைப்பட விருதுகள் சமீபத்தில்வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் ஜோடியாக நடித்து, கடந்த 2019-ம் ஆண்டு திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய படம் அசுரன். தனுஷ் இளைஞராகவும், வயதானவராகவும் இரு தோற்றங்களில் நடித்திருந்தார். கென் கருணாஸ், பசுபதி, பிரகாஷ்ராஜ், வெங்கடேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 100 நாட்களை கடந்து ஓடிய இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியடைந்தது. 

இந்நிலையில் அசுரன் படத்திற்கு சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆடுகளம் படத்தில் நடித்ததற்காக ஏற்கனவே தனுஷ் சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றிருந்த நிலையில் அசுரன் திரைப்படத்திற்காக இரண்டாவது முறையாக, சிரியந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார் தனுஷ்.

மேலும் செய்திகள்:நடிகை ஆலியா பட்டுக்கு கொரோனா பாதிப்பு..! அடுத்தடுத்து பாதிக்கப்படும் பாலிவுட் பிரபலங்கள்!
 

அதேபோல் நேற்று, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவித்தார்.
இதனை அடுத்து தாதா சாகிப் பால்கே விருதை ரஜினியும், தேசிய விருதை தனுஷும் ஒரே நாளில் பெற இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினியும், தனுஷும் ஒரே நாளில் பெற உள்ளதால் ரஜினியின் குடும்பத்தினர் உச்ச கட்ட மகிழ்ச்சியில் உள்ளனர். 

மேலும் செய்திகள்:ச்சீ... ச்சீ... ! இது என்ன கன்றாவி டிரஸ்.... மூடி வைத்ததை திறந்து காட்டிய பிக்பாஸ் நடிகையால் ரசிகர்கள் கடுப்பு
 

மே 3ஆம் தேதி தேசிய விருதுகள், வழங்கப்படும் விழாவில் அதே நாளில் தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்ட ரஜினிகாந்துக்கும் விருது வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?