சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு உடல்நல பாதிப்பு..? வெளியான உண்மை தகவல்..!

By manimegalai aFirst Published Nov 22, 2020, 2:07 PM IST
Highlights

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு திடீர் என உடல்நல பாதிப்பு ஏற்பட்ட தகவல் தமிழ் ரசிகர்கள் மற்றும் அவரது ரஜினி மக்கள் மன்ற நிவாகிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்த உண்மையான தகவலை ரஜினிகாந்தின் மக்கள் தொடர்பாளர் வெளியிட்டுள்ளார்.
 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு திடீர் என உடல்நல பாதிப்பு ஏற்பட்ட தகவல் தமிழ் ரசிகர்கள் மற்றும் அவரது ரஜினி மக்கள் மன்ற நிவாகிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்த உண்மையான தகவலை ரஜினிகாந்தின் மக்கள் தொடர்பாளர் வெளியிட்டுள்ளார்.

மேலும்  செய்திகள்: பிக்பாஸ் எலிமினேஷனலில் இருந்து காப்பாற்றப்பட்ட பிரபலம்..! பரபரப்பின் உச்சமாக வெளியான ப்ரோமோ..!
 

விரைவில் அரசியலுக்கு வருவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட ரஜினிகாந்தின் உடல்நிலை பற்றி கடந்த ஓரிரு மாதத்திற்கு முன் அறிக்கை ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. அதில், 2016ஆம் ஆண்டு மே மாதம் தமக்கு சிறுநீரக பாதிப்பு தீவிரமடைந்து, அமெரிக்காவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், இது ஒரு சிலருக்கே தெரியும் என்ற ரீதியில், ரஜினி சொல்வது போல் அந்த போலி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டிருப்பதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருக்கும் என்றும், அந்த போலி அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. எனவே, கொரோனா காலத்தில், மக்களை சந்திப்பது அத்தனை உசிதமாக இருக்காது என, மருத்துவர்கள் தம்மிடம் கூறியதை, ரஜினிகாந்த் தெரிவிப்பது போல அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும்  செய்திகள்: பிகினி உடையில் தந்தை எடுத்த செம்ம ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட ரகுல் ப்ரீத் சிங்..!
 

இதுகுறித்து விளக்கம் அளிக்கும் விதமாக, நடிகர் ரஜினிகாந்த், டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனது அறிக்கைப் போல, ஒரு கடிதம் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் தீவிரமாக பரவிக் கொண்டிருப்பதாக, ரஜினிகாந்த் கூறியுள்ளார். அது தன்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும் என்றும் நடிகர் ரஜினி குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், அதில் வந்திருக்கும், தனது உடல்நிலை தொடர்பான தகவல்கள், தமக்கு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை என்றும், ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். 

மேலும்  செய்திகள்: மேலாடை இன்றி நடிகை பார்வதி வெளியிட்ட புகைப்படம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
 

இந்நிலையில் தற்போது கொரோனா காலம் என்பதால் ரஜினிகாந்த் கூடுதல் பாதுகாப்புடன், தன்னுடைய பண்ணை வீட்டில் ஓய்வெடுத்து வருவதாக கூறப்பட்டது. மேலும் திடீர் என, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு திடீர் என காச்சல் ஏற்பட்டதால் மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாக சமூக வலைதலையில் தீயாக ஒரு தகவல் பரவி வந்த நிலையி, இது முற்றியும் வந்தந்தி என, ரஜினிகாந்தின் மக்கள் தொடர்பாளர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரஜினிகாந்த் நலமுடன் உள்ளதாக வெளியான தகவலை தொடர்ந்து ரசிகர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

click me!