குஷ்பு நிலை குறித்து பேசிய சுந்தர் சி!

Asianet News Tamil  
Published : Nov 05, 2017, 04:14 PM ISTUpdated : Sep 19, 2018, 01:23 AM IST
குஷ்பு நிலை குறித்து பேசிய சுந்தர் சி!

சுருக்கம்

sunder c said kushpoo operation

நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு கடந்த சில தினங்களாக வயிற்று வலி பிரச்சனையால் அவதிப் பட்டு வந்தார். இதுகுறித்து மருத்துவமனைக்கு சென்றபோது அவருடைய வயிற்றில் கட்டி உள்ளதாகவும் அதனை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில் அவர் நேற்று சென்னையில் உள்ள பிரபல மருத்துவ மனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நேற்றே அறுவை சிகிச்சை நல்ல படியாக முடிந்தது.

தற்போது இவருடைய கணவர் குஷ்புவின் நிலை குறித்து கூறியுள்ளார். அதில் தற்போது அறுவை சிகிச்சை முடிந்து குஷ்பு நன்றாக உள்ளதாகவும். இன்னும் இரு தினங்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் கூறியுள்ளார். மேலும் இரண்டு வாரங்கள் அவரை ஓய்வு எடுக்கச் சொல்லி மருத்துவர்கள் கூறி இருப்பதாகவும், பின் அவர் வழக்கம் போல் தன்னுடைய அன்றாட பணிகளை மேற்கொள்வர் என்றும் அவரது அறுவை சிகிச்சை குறித்து விசாரித்த அனைவருக்கும் தன்னுடைய நன்றியையும் தெரிவித்துள்ளார்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Nayanthara and Trisha : நீண்ட காலத்திற்கு பின் ஒன்றாக சுற்றும் நயன்தாரா, திரிஷா.. சந்திப்புக்கு இதுதான் காரணமா?!
Jacqueline Fernandez : மாடர்ன் உடையில் மயக்கும் ஜாக்குலின் பெர்னாண்டஸின் லேட்டஸ்ட் போட்டோஸ்!!