
பல பாமரமக்களை குறிவைத்து TRP க்காக அப்பாவி மக்களின் குடும்ப பிரச்சனைகளுக்கு கட்டப்பஞ்சாயத்து செய்யும் டிவி நிகழ்ச்சிகள் பற்றி சென்ற வாரம் நடிகை ஸ்ரீபிரியா சொன்ன கருத்து பெரிய பிரச்சனையாக வெடித்தது.
அவர் கருத்துக்கு பதிலடி கொடுத்து விதத்தில் பேசி வந்த நடிகை குஷ்பு, மற்றும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் தங்களது கருத்தை தெரிவித்திருந்தனர்.
இது ஒருபுறமிருக்க தற்போது ஸ்ரீபிரியா புதிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு அந்த குடும்பத்திற்கு என்ன ஆகிறது என பத்திரிகையாளர்கள் வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் உளவியல் ஆலோசனை என்பது சிகிச்சை பெறுபவருக்கும் உளவியல் நிபுணருக்கு மத்தியில் தான் நடக்கும்.
கேமரா முன்பு நடக்காது. அதுபற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதனால் ஏப்படியும் இந்த இரு நடிகைகளையும் ஒரு கை பாக்காமல் விடமாட்டார் போல் தெரிகிறது.
குஷ்பூவின் லட்சுமி ராமகிருஷ்ணன் பேசும் போது விட்டுவிட்டு, தற்போது பத்திரிகையாளர்களுக்கு கோரிக்கை விடுத்து வச்சி செய்கிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.