
சின்னத்திரை நடிகைகள் தற்கொலையா.... கொலையா ..... என கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு வீட்டில் பிணமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவங்கள் பலரையும் அதிர்ச்சி ஆக்கியுள்ளது.
சமீபத்தில் தான் தொலைக்காட்சி நடிகை சபர்ணா சென்னையில் உள்ள தனது வீட்டில் அழுகிய நிலையில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து தற்போது சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்தவர் துணை நடிகை ஜெயஸ்ரீ
வீட்டில் பிணமாகக் கிடைத்துள்ளார். இது மேலும் பல திரையுலகத்தினரை அதிர்ச்சியாக்கி உள்ளது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். மேலும் அவரது உடலைபிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர்.
ஜெயஸ்ரீ கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்று வில்லிவாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.