நான் பலருடன் படுக்கையை பகிர காரணம் த்ரிஷா தான்! ஸ்ரீரெட்டி அதிரடி வாக்குமூலம்!

First Published Jul 20, 2018, 11:02 AM IST
Highlights
Sri Reddy just target Trisha


தான் இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என பலருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள காரணமே நடிகை த்ரிஷா தான் என்று நடிகை ஸ்ரீரெட்டி கூறியுள்ளார். பட வாய்ப்புகள் கேட்டு போன போது நடிகர்கள், இயக்குனர்கள் தன்னை படுக்கையில் பயன்படுத்திக் கொண்டதாக ஸ்ரீரெட்டி தினமும் ஒருவரின் பெயரை கூறி வருகிறார். தெலுங்கின் முன்னணியில் இருக்கும் நானி முதல் தமிழில் பீல்டு அவுட் ஆன ஸ்ரீகாந்த் வரை பலருக்கு தன்னையே தான் விருந்து வைத்துள்ளதாக ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சென்னை வந்துள்ள ஸ்ரீரெட்டியிடம் பேட்டி எடுக்க முன்னணி தொலைக்காட்சிகள் முதல் சின்னஞ்சிறிய யூட்யூப் சேனல் வரை வரிசையில் நின்று கொண்டிருக்கின்றன. 

 இந்த நிலையில் வார இதழ் ஒன்றுக்கு ஸ்ரீரெட்டி பேட்டி அளித்துள்ளார். அப்போது அவரிடம் நடிகர்களும் இயக்குனர்களும் படுக்கைக்கு வருமாறு அழைத்த போது ஏன் நீங்கள் தவிர்க்கவில்லை? அவர்களின் ஆசைக்கு உடன்படாமல் சென்று இருக்கலாமே என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த ஸ்ரீரெட்டி, தனக்கு நடிகை ஆக வேண்டும் என்கிற ஆசை இருந்தது. ஏன் வெறியே இருந்தது. படுக்கையை பகிர்ந்து கொண்டால் தான் பிரபல நடிகை ஆக முடியும் என்கிற உண்மை எனக்கு தெரியவந்தது. இதனால் தான் நான் என் மானத்தை விட நடிகையாக வேண்டும் என்பதே முக்கியம் என்று என்னையே பலருக்கும் விருந்தாக்கினேன் என்று ஸ்ரீரெட்டி கூறினார். மேலும் ஒவ்வொருவரும் வாய்ப்பு தருவார்கள் தருவார்கள் என்று நம்பியே என்னை நான் இழந்த கொண்டிருந்தேன். 

ஒரு கட்டத்தில் தான் அனைவரும் ஏமாற்றியதை உணர்ந்து அரைநிர்வாண போராட்டம் நடத்தினேன் என்று பதில் அளித்தார் ஸ்ரீரெட்டி. சரி உங்களையே இழக்கும் அளவிற்கு நடிகையாகி என்ன செய்ய நினைத்தீர்கள்? நடிகையாக வேண்டும் என்பதற்காக உங்கள் மானத்தையே இழக்க ஏன் தயாரானீர்கள்? என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த ஸ்ரீரெட்டி, எனது காதலனுடன் நான் ஒரு பார்ட்டிக்கு சென்று இருந்தேன். அந்த பார்டிக்கு நடிகை த்ரிஷாவும் நடிகர் ராணாவும் வந்திருந்தனர். அப்போது பார்ட்டியில் இருந்த ஆண்கள் எல்லாரும் த்ரிஷாவை சுற்றி சுற்றி வந்தனர். பெண்கள் ராணாவை சுற்றி வந்தனர். என் காதலன் கூட த்ரிஷாவை பற்றியேபேசிக் கொண்டிருந்தான். மேலும் ஒரு நடிகை ஆனால் இந்த அளவிற்கு புகழ் கிடைக்குமா? என்று யோசித்து சரி நடிகை ஆகலாம் என்கிற முடிவுக்கு வந்ததாக ஸ்ரீரெட்டி கூறியுள்ளார். ஸ்ரீரெட்டி கூறுவதை பார்த்தால், நடிகை த்ரிஷா தான் தனது ரோல்மாடல் என்று சொல்வது போல் உள்ளது.

click me!