கொரோனாவில் இருந்து முழுமையாக குணமடைந்தார் எஸ்.பி.பி! ரசிகர்களின் பிராத்தனைக்கு கிடைத்த வெற்றி..!

By manimegalai aFirst Published Sep 7, 2020, 5:15 PM IST
Highlights

பாடகர் எஸ்.பி.பி பாலசுப்ரமணியன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், அபாய நிலையை தாண்டி மெல்ல மெல்ல அவருடைய உடல் நலம் நன்கு தேறி வருவதாகவும், திங்கள் கிழமை அன்று, நல்ல செய்தி வரும் என சரண் கூறியிருந்த நிலையில், எஸ்.பி.பி கொரோனாவில் இருந்து முழுமையாக மீண்டு விட்டதாக அறிவித்துள்ளார்.
 

பாடகர் எஸ்.பி.பி பாலசுப்ரமணியன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், அபாய நிலையை தாண்டி மெல்ல மெல்ல அவருடைய உடல் நலம் நன்கு தேறி வருவதாகவும், திங்கள் கிழமை அன்று, நல்ல செய்தி வரும் என சரண் கூறியிருந்த நிலையில், எஸ்.பி.பி கொரோனாவில் இருந்து முழுமையாக மீண்டு விட்டதாக அறிவித்துள்ளார்.

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  அங்கு தொடர் சிகிச்சையில் இருந்த எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை கடந்த 14ம் தேதி முதலே கவலைக்கிடமானது.  இதையடுத்து  எஸ்.பி.பி. நலம் பெற்று மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டுமென ஆகஸ்ட் 20 ஆம் திரையுலகினர், இசைப்பிரியர்கள், ரசிகர்கள், சாமானிய மக்கள் என லட்சக்கணக்கானோர் கையில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். 

அதன் பலனாக கடந்த சில நாட்களாகவே எஸ்.பி.பி. உடல் நிலை குறித்து நல்ல தகவல்களை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டு வருகிறது. மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கூட எஸ்.பி.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை சீராகி வருவதாகவும், உயிர் காக்கும் கருவிகளுடன் தொடர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்திருந்தது. தற்போது மயக்க நிலையில் இருந்து முழுமையாக மீண்டுள்ள எஸ்.பி.பி.க்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

எஸ்.பி.பி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆரம்ப காலத்தில் பல்வேறு வதந்திகள் தீயாய் பரவின. இதனால் கவலையடைந்த எஸ்.பி.பி.சரண், அப்பாவின் உடல் நிலை குறித்து தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும், நானே தினமும் அவருடயை உடல் நிலை குறித்து அதிகாரப்பூர்வ தகவல்களை தருகிறேன் என்றும் கூறியிருந்தார். அதன்படி தினமும் மருத்துவர்களுடன் கலந்தாலோசிக்கும் எஸ்.பி.பி.சரண், அவருடைய அப்பாவின் உடல் நிலை குறித்த வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். 

இந்நிலையில் இன்று எஸ்.பி.பி.சரண் வெளியிட்டுள்ள வீடியோவில்,  அப்பாவின் உடல் நிலை சீராக உள்ளது எனவும் தற்போது அவருக்கு கொரோனா நெகடிவ் என வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து பிசியோ தெரபி சிகிச்சை தொடர்வதாகவும், அவர் பேச நினைப்பதை எழுதி காட்டுவதோடு, ஐபேடில், கிரிக்கெட் , டென்னிஸ் போன்றவற்றை பார்த்து வருவதாக தெரிவித்துள்ளார். இந்த தகவல் எஸ்.பி. பி ரசிகர்கள் மனதை நிம்மதி அடைய செய்ததோடு, லட்ச கணக்கான ரசிகர்களின் பிரார்த்தனைக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.
 

click me!