எஸ்.பி.பி உடல் நிலை குறித்து சற்றுமுன் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட பரபரப்பு தகவல்!

By manimegalai aFirst Published Aug 15, 2020, 4:02 PM IST
Highlights

பாடகர் எஸ்.பி.பி, உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக நேற்று மருத்துவமனை சார்பாக வெளியிட்ட தகவலில் தெரிவித்திருந்த நிலையில், தற்போது இன்று எப்படி இருக்கிறார் என, அறிக்கை மூலம் தெரிவித்துள்ளனர்.
 

பாடகர் எஸ்.பி.பி, உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக நேற்று மருத்துவமனை சார்பாக வெளியிட்ட தகவலில் தெரிவித்திருந்த நிலையில், தற்போது இன்று எப்படி இருக்கிறார் என, அறிக்கை மூலம் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்: ஹாட் உடையில் புகைபிடிக்கும் போட்டோவை பகிர்ந்து தத்துவ மழை பொழியும் அமலா பால்..!
 

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 16 மொழிகளில் 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி, உலக அளவில் மிகவும் பிரபலமானவர், எஸ்.பி.பி.பாலசுப்ரமணியம். இவருக்கு கொரோனாத்தொற்று ஏற்பட்ட போது உடல் நிலை சீராக இருந்தாலும், நேற்று இவருடைய உடல் நிலை குறித்து அறிக்கை வெளியிட்ட தனியார் மருத்துவமனை, கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவித்திருந்தனர்.

செயற்கை சுவாசம் மூலம் ஆச்சிஜன் செலுத்தப்பட்டு வருவதாகவும், ஐ.சி.யூவில் அவர் சிகிச்சையில் உள்ளதாக தெரிவித்திருந்தனர். இதனால், இவருடைய ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலர், இவருடைய உடல் நிலை விரைவில் நலம் பெற வேண்டும் என தொடர்ந்து சமூக வலைதளத்தின் மூலம் தெரிவித்திருந்தனர்.

மேலும் செய்திகள்: சூர்யா - ஜோதிகா மகள் தியாவின் இந்த புகைப்படங்களை பார்த்திருக்கீங்களா? அதிகம் பார்த்திடாத ரேர் போட்டோஸ்!
 

மேலும், தன்னுடைய ரசிகர்களுக்காக நேற்று எஸ்.பி.பி ஐ.சி.யூவில் இருந்தபடி, தம்ஸ்அப் காட்டியபடி புகைப்படம் வெளியிட்டிருந்தார். இதில் அவருக்கு எக்மோ கருவி பொருத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவருடைய உடல் நிலை குறித்த அறிக்கை பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சற்று முன் வெளியாகியுள்ளது. இதில் இவருடைய உடல் நிலை தற்போது சீராக உள்ளதாகவும், தொடர்ந்து ஐ.சி.யூவில், செயற்கை சுவாச கருவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். இந்த தகவலுக்கு பின்னரே ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார். 

click me!