அப்பா உடல் நிலை குறித்து நேற்று ஏன் வீடியோ வெளியிடவில்லை?... எஸ்.பி.பி. சரண் விளக்கம்...!

By Kanimozhi PannerselvamFirst Published Aug 31, 2020, 7:54 PM IST
Highlights

உங்கள் பிரார்த்தனைகளுடன் அப்பா இதிலிருந்து விரைவில் மீண்டு வருவார், வீடு திரும்புவார் என்று நான் நம்புகிறேன். மீண்டும் உங்கள் அனைவரின் அன்பு, அக்கறை, பிரார்த்தனைகளுக்கு நன்றி. உங்களுக்கு நாங்கள் கடன் பட்டிருக்கிறோம். 

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை தொடர்ந்து சீராக ஆரம்பித்துள்ளது. தொடர்ந்து அவருக்கு எக்மோ மற்றும் வென்டிலேட்டர் உதவியுடன் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தினந்தோறும் அப்பாவின் உடல் நிலை குறித்து எஸ்.பி.பி.சரண் வீடியோ வெளியிட்டு வருகிறார். நேற்று அவர் எந்த வீடியோவும் வெளியிடவில்லை. அது ஏன் என்பது குறித்தும் எஸ்.பி.பி-யின் உடல் நிலை பற்றியும் இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

நேற்று உங்களிடம் கூற பெரிதாக தகவல்கள் ஒன்றும் இல்லை, அதனால் தான் ஒருநாள் காத்திருந்து இன்று பதிவிடுகிறேன். என் அம்மா நலமுடன் உள்ளார். நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார். வீடு திரும்பிவிட்டார். அம்மாவைப் பற்றி பலரும் கேட்பதால் நான் இதைக் கூறுகிறேன்.நேற்றும் இன்றும் அப்பாவைப் பார்க்க மருத்துவமனை சென்றிருந்தேன். அப்பாவின் ஆரோக்கியம் குறித்து ஒவ்வொரு நாளும் மருத்துவர்கள் என்னிடம் பகிர்ந்து வருகின்றனர். அப்பாவின் நுரையீரல் எக்ஸ்ரேவை என்னிடம் காட்டினார்கள். நல்ல முன்னேற்றம் தெரிகிறது.

அப்பாவிற்கு பிசியோதெரபி சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். நீண்ட நாட்கள் படுக்கையிலேயே இருந்ததால் தசைகள் வலுப் பெற நிறைய உடற்பயிற்சி செய்து வருகிறார். அவரது சுவாசமும் சற்று சீராகியுள்ளது. எனவே அவரது நிலையில் நல்ல முன்னேற்றத்தைப் பார்க்க முடிகிறது.

உங்கள் பிரார்த்தனைகளுடன் அப்பா இதிலிருந்து விரைவில் மீண்டு வருவார், வீடு திரும்புவார் என்று நான் நம்புகிறேன். மீண்டும் உங்கள் அனைவரின் அன்பு, அக்கறை, பிரார்த்தனைகளுக்கு நன்றி. உங்களுக்கு நாங்கள் கடன் பட்டிருக்கிறோம். 
 

click me!