sivakarthikeyan: இது வேற லெவல் காம்போ ஆச்சே... முதன்முறையாக சூர்யாவுடன் கூட்டணி அமைத்த சிவகார்த்திகேயன்

By manimegalai aFirst Published Nov 20, 2021, 12:37 PM IST
Highlights

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம்வரும் சூர்யாவும், சிவகார்த்திகேயனும் முதன்முறையாக இணைந்து பணியாற்றி உள்ளனர்.

நடிகர் சூர்யா நடிப்பில், அண்மையில் நேரடியாக ஓடிடியில் வெளியான 'ஜெய் பீம்' திரைப்படம், பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வரும் நிலையில், தற்போது சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குனர் பாண்டிராஜ் இயக்கும் 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.

தமிழ் திரையுலகில் வெற்றிகரமான இயக்குனராக வலம்வருபவர் பாண்டிராஜ். இவர் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் எதற்கும் துணிந்தவன். இப்படத்தில் நடிகர் சூர்யா ஹீரோவாக நடிக்கிறார். ஏற்கனவே பாண்டிராஜ் இயக்கிய பசங்க 2 படத்தில் நடித்த சூர்யா தற்போது இரண்டாவது முறையாக அவருடன் கூட்டணி அமைத்துள்ளார்.

இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக டாக்டர் பட நடிகை பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும் திவ்யா துரைசாமி, தேவதர்சினி, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். வில்லனாக வினய் நடிக்கிறார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். 

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனும் பணியாற்றியுள்ளது தெரியவந்துள்ளது. இப்படத்தில் ஒரு பாடலுக்கு லிரிக்ஸ் எழுதி உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நேற்று எதற்கும் துணிந்தவன் படத்தின் ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு, அந்த போஸ்டரில் சிவகார்த்திகேயனின் பெயரையும் குறிப்பிட்டிருந்தது. 

ஏற்கனவே கோலமாவு கோகிலா, கனா, டாக்டர் போன்ற படங்களுக்காக சிவகார்த்திகேயன் எழுதிய பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் பட்டைய கிளப்பியது. இதனால்  எதற்கும் துணிந்தவன் படத்திற்காக அவர் எழுதியுள்ள பாடல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. விரைவில் இப்பாடல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதற்கும் துணிந்தவன் திரைப்படம் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் 4-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!