தற்போது தவசியின் சிகிச்சைக்கு போதிய பணம் இல்லாததால் அவருடைய மகன் உதவி கேட்டு தனது தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.
தமிழில் பல படங்களில் மாமா, கட்ட பஞ்சாயத்து செய்யும் பெரியவர், ஊர் பூசாரி போன்ற பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்தவர் மீசை தவசி. வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரிக்கு அப்பாவாக நடித்துள்ளார். அந்தப் படத்தில், கருப்பன்… குசும்புக்காரன்…என்று வரும் டயலாக்கை பேசி ரசிகர்களை சிரிக்க வைத்தவர். ‘களவாணி’, ‘சுந்தரபாண்டியன்’, ‘ஜில்லா’, ‘வீரம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
பெரிய மீசையும், தாடியும், குரலும் தான் அவருடைய தனிப்பட்ட அடையாளமாகவே விளங்கி வந்தது. சினிமாவில் மிகப்பெரிய கனவுகளுடன் அலைந்து தற்போது துணை நடிகராக வெளியே தெரிய ஆரம்பித்துள்ள மீசை தவசி புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார். கட்டுமஸ்தான தேகத்துடன் மீசை தடவிக்கொண்டு காட்சியளித்து வந்த தவசி, புற்றுநோயின் தாக்கத்தால் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு எலும்பும் தோலுமாக இளைத்து போயுள்ளார்.
Tamil Actor who has done lot of support roles is having a serious medical condition.. His son is looking for help..
Please see below.. 1 digit missing in his phone number.. https://t.co/N3scKguqJb pic.twitter.com/iVVJzdacTp
தற்போது தவசியின் சிகிச்சைக்கு போதிய பணம் இல்லாததால் அவருடைய மகன் உதவி கேட்டு தனது தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். திரையுலகினர் பலருக்கும் டேக் செய்யப்பட்டுள்ள நிலையில், சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உட்பட பலரும் உதவ தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.