சின்னத்திரை நடிகர் தீடீர் தற்கொலை..!

Published : Feb 18, 2021, 08:52 PM IST
சின்னத்திரை நடிகர் தீடீர் தற்கொலை..!

சுருக்கம்

தன்னுடைய நண்பரின் வீட்டில் திடீர் என, சின்னத்திரை நடிகர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

தன்னுடைய நண்பரின் வீட்டில் திடீர் என, சின்னத்திரை நடிகர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவரான இந்திரக்குமார், நடிப்பின் மீது கொண்ட  தீவிர ஆசையால்... நடிக்க வாய்ப்பு கிடைக்கும் சின்ன, சின்ன கதாபாத்திரங்களில் கூட நடித்து வந்துள்ளார். தற்போது பிரபல  தனியார் தொலைக்காட்சி சீரியலில் ஒரு சிறிய ரோலில் நடித்து வருகிறார். 

நேற்று இரவு நண்பர்களுடன், மிகவும் சந்தோஷமாக திரையரங்கில் படம் பார்த்துவிட்டு, சிரித்து பேசி கொண்டிருந்துள்ளார். அதே நேரத்தில் இவரது குடும்பத்தில் சில பிரச்சனைகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

திரைப்படம் பார்த்து விட்டு வந்ததால், நேரமாகிவிட்டது என கூறி  மதனகோபாலபுரத்தில் தனது நண்பரின் வீட்டிலேயே தூங்கியுள்ளார். தனி அறையில் படுத்திருந்த அவர், காலையில் திடீர் என அங்கு இருந்த மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு  தற்கொலை செய்து கொண்டதை கண்டு, அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கவே, விரைந்து வந்த அவர்கள்...   உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நடிகை நிதி அகர்வால் மீது கைவச்சது யார்? அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய போலீஸ்
தங்கமயிலின் அதிரடி முடிவு! - அம்மாவை நம்பினால் வேலைக்காது வீட்டு வாசலில் அமர்ந்து தர்ணா; நீதி கிடைக்குமா?