அதிர்ச்சி... பிரபல இயக்குனர் சி.வி.சசிகுமார் மாரடைப்பால் திடீர் மரணம்..!

By manimegalai aFirst Published Nov 14, 2021, 4:53 PM IST
Highlights

செங்கோட்டை திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சி.வி.சசிகுமார் புற்றுநோயிக்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீர் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்துள்ளது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கோட்டை திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சி.வி.சசிகுமார் புற்றுநோயிக்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீர் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்துள்ளது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற 'செங்கோட்டை' திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சி.வி.சசிகுமார். அர்ஜுன் கதாநாயகனாக நடித்திருந்த இந்த படத்தில் நடிகை ரம்பா மற்றும் மீனா ஆகிய இரண்டு கதாநாயகிகள் நடித்திருந்தனர். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில், விஜயகுமார், ஆனந்த ராஜ், வடிவேலு, டெல்லி கணேஷ் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுதிரி தயாரித்திருந்தார்.

இந்த படத்தை தொடர்ந்து மற்ற எந்த படங்களையும் இவர் இயக்க வில்லை என்றாலும், பல படங்களில் எழுத்தாளராக பணியாற்றியுள்ளார். மேலும் தமிழில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த 'மகாபாரம்' தொடரையும் இயக்கி இருந்தார்.

இந்நிலையில் கடந்த சில வருடங்களாகவே... ராமச்சந்திரா மருத்துவமனையில் புற்று நோய்க்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் இவர் மரணம் அடைத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. திரையுலகில் அனைத்து பிரபலங்களுக்கும் மிகவும் நெருக்கமானவராக இருந்த இவரது மறைவை தொடர்ந்து, பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களுடைய இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள்.

click me!