
ஒவ்வொரு வருடமும், சிறந்த இலக்கிய படைப்புகளை கவுரவிக்கும் விதமாக சாகித்ய அகாடமி விருதுகளை, மத்திய அரசு வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வகையில் இம்முறை 20 மொழிகளை சேர்ந்த சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில், கடந்த 1955ஆம் ஆண்டிலிருந்து சிறந்த, நாவல், சிறுகதை, புனைவு (புனைவில்லாத), உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் தலைசிறந்த இலக்கிய படைப்புகளுக்கு, உயரிய விருதுகளில் ஒன்றான சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டு வருகிறது. இம்முறை தமிழகத்தைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் இமையம் சாகித்ய அகாடமி விருதை பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர் எழுதிய 'செல்லாத பணம்' என்ற நாவலுக்காக 2020 ஆம் ஆண்டின் சாகித்ய அகாடமி விருதை பெற்றுள்ளார். இவ்விருதை பெறுபவர்களுக்கு, தாமிர பட்டயம், மற்றும் ஒரு லட்ச ரூபாய் ரொக்கப் பணமும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. சாகித்ய அகாடமி விருதை பெற்றுள்ள, தமிழகத்தை சேர்ந்த எழுத்தாளர் இமையத்துக்கு பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் இவர் தனக்கு 1994 ம் ஆண்டே, இவ்விருது கிடைத்து இருக்க வேண்டும்.காலம் தாழ்ந்து கிடைத்துயிருக்கிறது. இருந்தாலும் மகிழ்ச்சி என தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.