வதந்தியை பரப்பாதீர்கள்! எஸ்.பி.ஜனநாதன் உடல்நிலை குறித்து இயக்குனர் அமீர் பரபரப்பு தகவல்!

By manimegalai aFirst Published Mar 12, 2021, 2:49 PM IST
Highlights

பிரபல முன்னணி இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவிவரும் நிலையில், இயக்குனர் அமீர் பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 

பிரபல முன்னணி இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவிவரும் நிலையில், இயக்குனர் அமீர் பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்: மோசமான நிலையில் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன்! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!
 

இதுவரை நான்கு படங்களை மட்டுமே இயக்கி, தேசிய விருது உட்பட பல விருதுகளை பெற்ற இயக்குனர், எஸ்.பி.ஜனநாதன் தற்போது நடிகர் விஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதிஹாசன் நடித்து முடித்துள்ள 'லாபம்' திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் லாபம் படத்தின் வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், மார்ச் 11ஆம் தேதி மாலை 3 மணியளவில் வீட்டிற்கு சாப்பிடுவதற்காக சென்ற எஸ்பி ஜெகநாதன் வெகுநேரமாகியும் அலுவலகத்திற்கு வராததால், செல்போன் அழைப்பை எடுக்காததால், உதவி இயக்குனர்கள் அவரை அவருடைய வீட்டிற்கு தேடிச் சென்றுள்ளனர். அங்கு வீட்டின் மெயின் கேட் திறந்து இருந்ததால் உள்ளே சென்று பார்த்த போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

மேலும் செய்திகள்: 'ஈஷா' சிவராத்திரி கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட சமந்தா - ரகுல் ப்ரீத் சிங்! வைரலாகும் புகைப்படங்கள்!
 

இயக்குனர் எஸ்.பி.ஜெகநாதன் மூச்சு பேச்சில்லாமல் கீழே விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ந்த அவர்கள், உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைத்து கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவரை கொண்டு போய் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இவரது உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகளும் பரவி வருகிறது.

இதற்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இயக்குனர் அமீர்... "மரியாதைக்குரிய பத்திரிக்கை, தொலைக்காட்சி மற்றும் ஊடக நண்பர்களுக்கு, அன்பும் அறிவும் நிறைந்த அண்ணன் இயக்குநர் SP ஜனநாதன் அவர்களுக்கு நேற்றைய தினம் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட காரணத்தினால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது எனவே உறுதி செய்யப்படாத தகவல்களை யாரும் பகிர வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். 

click me!