பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த சத்யராஜ் மகள்! எதற்கு தெரியுமா?

By manimegalai aFirst Published Oct 1, 2018, 1:28 PM IST
Highlights

மழைக்காலம் வந்திருச்சி… கொஞ்சம் கவனமா இல்லாவிட்டால், ரொம்ப கஷ்டமாகிவிடும் என சத்யராஜ் மகள் திவ்யா எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் ஏன் எச்சரிக்கை விடுக்க வேண்டும்? என்கிறீர்களா..?!

மழைக்காலம் வந்திருச்சி… கொஞ்சம் கவனமா இல்லாவிட்டால், ரொம்ப கஷ்டமாகிவிடும் என சத்யராஜ் மகள் திவ்யா எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் ஏன் எச்சரிக்கை விடுக்க வேண்டும்? என்கிறீர்களா..?!
 
பிரபல நடிகரான சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் மிகப் பிரபலமான ஊட்டச்சத்து நிபுணர்கள் ஒருவராவார். தன்னை சுற்றிஇருப்பவர்கள் எல்லோருமே ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட திவ்யா சத்யராஜ்,அரசு பள்ளிகளில் படிக்கும்குழந்தைகளுக்கும், வசதியில்லாத குழந்தைகளுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கிறது என்று கூறியதோடு, அதைத்தடுப்பதற்கான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு சில ஆலோசனைகளை வழங்கி வருவதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்.


 
தந்தையும், சகோதரரும் நடிப்பதை தொழிலாகக் கொண்டிருந்தாலும் திவ்யா சத்யராஜ், எப்போதும் உடல்நலம் சார்ந்த படிப்புகளில்மட்டுமே கவனம் செலுத்தி வந்திருக்கிறார். இதை ஏற்கனவே அவர் பலமுறை தெரிவித்திருந்தாலும், அவரும் சினிமாவில் நடிக்கப்போகிறார் என வதந்திகள் அடிக்கடி கிளம்புவது உண்டு.

தற்போது, வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ளதால், புதிய வகை வைரஸ் நோய் தாக்குதல்கள் ஏற்படும் என்று கூறி மிரளவைத்திருக்கிறார் திவ்யா சத்யராஜ். பொதுவாகவே மழைக் காலங்களில், அதாவது அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் பலவிதமான வைரஸ் நோய்கள் ஏற்படும் என்பதை சுட்டிக் காட்டுகிறார் திவ்யா சத்யராஜ்.


 
வைரஸ் நோய் பாதிப்பை தடுக்க, பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்றும்வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், பொதுமக்கள் நோய்வாய் பாதிப்பில் இருந்து தங்களைக்காத்துக்கொள்ள, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டியது அவசியம் என்றும், நோய்களை தடுக்க தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது கட்டாயம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.


 
உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க முக்கியமான சத்துக்களான விட்டமின் பி, விட்டமின் சி ஆகிய சத்துக்களுடைய உணவுப்பொருட்களை முறையாக உண்டு, எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறார். அவ்வாறு செய்யும்போதுமழைக்காலங்களில் வழக்கமாக ஏற்படும் வைரஸ் பாதிப்பு, இருமல், சளி போன்ற பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம் என்று அவர்கூறியுள்ளார். ஒருவேளை நோய்வாய்ப்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்று கூறிய அவர், மருந்து கடைகளில் வாங்கும்மாத்திரைகளை சரியாக கவனித்து சாப்பிட வேண்டும் என்றும் திவ்யா சத்யராஜ் கூறியுள்ளார்.

click me!