நான் நடிக்க பயந்த கதாபாத்திரம்....!!! சரண்யா பொன்வண்ணன் ஓபன் டாக்....!!! 

 
Published : Dec 24, 2016, 01:02 PM ISTUpdated : Sep 19, 2018, 02:53 AM IST
நான் நடிக்க பயந்த கதாபாத்திரம்....!!! சரண்யா பொன்வண்ணன் ஓபன் டாக்....!!! 

சுருக்கம்

ராம் படத்தில் ஆரமித்து இன்று வரை  தமிழ் சினிமாவில் அம்மா கதாபாத்திரம் என்றால் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது சரண்யா பொன்வண்ணன் தான்.

கிராமத்து அம்மா வேடம் முதல் எப்படி பட்ட வேடத்தையும் உள்வாங்கி நடிப்பவர் என்று சொன்னால் அது மிகையாகாது.

இவர் முன்னணி இளம் நடிகர்கள் அனைவருக்குமே அம்மாவாக நடித்துள்ளார்.
மேலும் பல நடிகர்கள் இவருடன் மகனாக நடிக்க வேண்டும் என பல பேட்டிகளிலும் கூறியுள்ளனர்.

இவர் தற்போது 'அச்சமின்றி' என்ற படத்தில் முதல் முறையாக  நெகட்டிவான கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம்.

'என்னமோ நடக்குது' படத்தை இயக்கிய ,  ராஜபாண்டி இயக்கும் இப்படத்தில் விஜய் வசந்த் நாயகனாக நடிக்கிறார்.

இதுபற்றி சரண்யா பொன்வண்ணன் கூறுகையில், கதையை கேட்கும்போதே பயந்தேன், நெகட்டிவ் கதாபாத்திரம் எனக்கு பொருந்தாது என்றேன், படப்பிடிப்புக்கு முதல்நாள் கூட இயக்குனருக்கு போன் செய்து நடிக்கலை என்றேன். அவர் என்னை நம்பிக்கையோடு நடிக்க வைத்தார் என்று கூறியுள்ளார்.

பாசக்கார அம்மாவாக நடித்த இவருக்கு வில்லி கதாபாத்திரம் எந்த அளவிற்கு பொருந்தும் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அகண்டா 2' - எப்போது ஓடிடியில் ரிலீஸ்? எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம்? ரசிகர்களுக்கு விருந்து!
வெட்கம் மானம் சூடு சொரணை இல்லையா? எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலுக்கு வலுக்கும் எதிர்ப்பு!