நயன்தாராவின் இடத்தை பிடித்த சமந்தா…? முன்னணி நடிகருடன் கைகோர்ப்பதால் ரசிகர்கள் உற்சாகம்..!

By manimegalai aFirst Published Oct 27, 2021, 9:27 AM IST
Highlights

பிரச்சினைகள் முடிந்து மீண்டும் படப்பிடிப்பு தொடங்க பல மாத காலமாகலாம். அப்போது பிற படங்களுக்கு கொடுத்த கால்ஷீட் பாதிக்கப்படும் என்பதால் நயன்தாரா இத்தகையை முடிவை எடுத்துள்ளார்.

பிரச்சினைகள் முடிந்து மீண்டும் படப்பிடிப்பு தொடங்க பல மாத காலமாகலாம். அப்போது பிற படங்களுக்கு கொடுத்த கால்ஷீட் பாதிக்கப்படும் என்பதால் நயன்தாரா இத்தகையை முடிவை எடுத்துள்ளார்.

தமிழில் தளபதி விஜய்-க்கு மூன்று வெற்றிப்படங்களை கொடுத்ததன் மூலம் இந்திய அளவில் கவனத்தை ஈர்த்த இயக்குனர் அட்லி, பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாரூக்கான் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார். இந்த படத்திலும் ஷாரூக்கிற்கு ஜோடியாக தமக்கு மிகவும் பிடித்த நயன்தாராவையே நடிக்க ஒப்பந்தம் செய்தார் அட்லி. இதன் மூலம் இந்தியில் முதல் முறையாக நயன்தாரா கால்பதிப்பார் என்று கூறப்பட்டது.

இந்தநிலையில் அட்லி இயக்கத்தில் ஷாரூக்கான் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பிற்காக நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் வெளிநாடு பறந்தனர். ஆனால் அடுத்த சில நாட்களில் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் கைது செய்யப்படவே துடிதுடித்து தாயகம் திரும்பினார் ஷாரூக். இதனால் படப்பிடிப்பை தொடங்க முடியாமல் மொத்த படக்குழுவும் இந்தியா திரும்பிவிட்டது. ஆர்யன் கான் வழக்கு மிகவும் சிக்கலாக மாறியுள்ளதால் இப்பிரச்சினையில் இருந்து வெளியே வர ஷாரூக்கானிற்கு பல மாதங்கள் ஆகலாம் என்று கூறப்படுகிறது.

புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்க பல மாதங்கள் ஆகலாம் என்பதால் ஷாருக் கான் படத்தில் இருந்து விலக நடிகை நயன்தாரா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும்போது ஏற்கெனவே வேறு படங்களுக்கு ஒதுக்கிய கால்ஷீட்டை ரத்து செய்யக்கூடிய பிரச்சினை எழலாம் என்பதால் நயன்தாரா இத்தகையை முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில் ஷாரூக் கான் படத்தில் நயன்தாராவிற்கு பதிலாக சமந்தாவை ஒப்பந்த செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. பேமிலி மேன் வெப் தொடருக்கு நல்ல வரவேற்பை அடுத்து இந்தியிலும் சமந்தாவிற்கு ரசிகர்கள் அதிகரித்துள்ளனர். இதனால் அவரையே நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்துள்ளது. அதேவேளையில், சமந்தாவை விவகாரத்து செய்யும் அவரது முன்னாள் கணவர் நாகசைத்தன்யா, இந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். அவருக்கு போட்டியாக சமந்தாவும் இந்தி திரையுலகிற்கு செல்வதால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.  

click me!