திரைப்படத் தொழிலாளர்கள் 25 ஆயிரம் பேருக்கு தலா 1,500..! சல்மான் கான் அதிரடி உதவி..!

By manimegalai aFirst Published May 8, 2021, 5:04 PM IST
Highlights

கொரோனாவின் இரண்டாவது அலை, அதி தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக இந்தியாவின் பல்வேறு ஸ்டேட்டில்  பொதுமுடக்கமும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தை விட, டெல்லி, மும்பை, மஹாராஷ்டிரா, கர்நாடகா, ஆகிய பகுதிகளில் கொரோனா பரவல் வேகம் எடுத்துள்ளதால், திரைப்பட பணிகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.
 

கொரோனாவின் இரண்டாவது அலை, அதி தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக இந்தியாவின் பல்வேறு ஸ்டேட்டில்  பொதுமுடக்கமும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தை விட, டெல்லி, மும்பை, மஹாராஷ்டிரா, கர்நாடகா, ஆகிய பகுதிகளில் கொரோனா பரவல் வேகம் எடுத்துள்ளதால், திரைப்பட பணிகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்: ஸ்லீவ் லெஸ் உடையில் செம்ம மாடர்னாக தங்கை ஷாமிலியுடன் அஜித் மனைவி ஷாலினி..! வைரலாகும் புகைப்படம்!
 

அந்த வகையில், ஏற்கனவே கடந்த ஆண்டு மார்ச் மாதம் போடப்பட்ட ஊரடங்கின் தாக்கத்தில் இருந்தே இன்னும் மீண்டு வராதா திரையுலகினர், கொரோனாவின் இரண்டாவது அலை வேதனையை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் திரையுலகில் கூலி தொழிலாளராக பணியாற்றி வருபவர்கள் அன்றாட பிழைப்புக்கே அல்லாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான், இந்தி திரையுலகை சேர்த்த 25 ஆயிரம் பேருக்கு தலா 1,500 ரூபாய் வீதம் 3,75,00,000 ரூபாய் நிதியுதவி அளிப்பதாக அறிவித்து தொழிலாளர்கள் மனதை குளிர வைத்துள்ளார்.

மேலும் செய்திகள்: பிரியா பவானி ஷங்கர் குடும்பத்தையே சோகத்தில் ஆழ்த்திய திடீர் மரணம்..! நெகிழவைக்கும் பதிவு..!
 

இந்தியா முழுவதும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மத்திய அரசு 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சினிமா தொழிலாளர்களும் இதனால் வேலை இழந்துள்ளனர். மேலும் பல பிரபலங்கள், வேலையில்லாமல் கஷ்டப்படுவதால் திரையுலகை சேர்ந்தவர்களும் உதவ முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்: பார்பி டால் போல்... பளீச் அழகில் பம்பரமாய் சுற்றி... இளம் நெஞ்சங்களை சுழட்டி போட்ட லாஸ்லியா..!
 

தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் எப்படி அடுத்தடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்களோ... அதே போல், பாலிவுட் திரையுலகினரும் கொரோனா இரண்டாவது அலையால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள், ரன்பீர் கபூரின் துவங்கி, அவரது காதலி ஆலியா பட், தீபிகா படுகோனே, உள்ளிட்ட பலர் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று தொற்றில் இருந்து மீண்டனர் எனபது குறிப்பிடத்தள்ளது.

click me!