
இயக்குனர் செல்வராகவன் நடிகராக களமிறங்கிய, சாணி காகிதம் திரைப்படம் வரும் ஏப்ரல் -7 ம் தேதி நேரடியாக ஓடிடியில் ரீலிஸ் ஆக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பல்வேறு துறைகளில் தடம் பதித்தவர்கள், தற்போது நடிகர்களாக அவதாரம் எடுத்து வருகின்றனர். அந்த வரிசையில், தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனராக வலம் வரும், செல்வராகவன் ஹீரோ ஜொலிக்க முடிவு செய்துள்ளார்.
ஆக சிறந்த படைப்புகள்:
செல்வராகவன் இயக்கத்தில் உருவான, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன்,என் ஜி கே உள்ளிட்ட வித்தியாசமான கதை களம் கண்டுதமிழ் சினிமாவின் இன்றுவரை ஆகச் சிறந்த படைப்புகளாக திகழ்கின்றனர். இந்த நிலையில் இயக்கத்தில் மட்டும், கவனம் செலுத்தி வந்த செல்வராகவன் இப்பொழுது நடிப்பிலும் களம் இறங்கியுள்ளார்.
சாணிக் காயிதம்:
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரிப்பில் செல்வராகவன் ஹீரோவாக நடித்துள்ளார். படத்தில், செல்வராகவனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும், யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், தமிழ் சினிமாவில் முன்னதாக வெளியான 'ராக்கி' படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று தந்தது.
கதைக்களம்:
80களில் நடப்பது போன்ற கதைக்களத்துடன், ராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவனின் வழிப்பறிக் கொள்ளை சம்பந்தப்பட்ட பல காட்சிகள் மற்றும் திரைக்கதைகள் பதிவாகி இருக்கிறது. கடந்த வருடம் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று தந்தது.
ஓடிடியில் ரீலிஸ் எப்போது?
இந்நிலையில், சாணி காகிதம் திரைப்படம் வரும் ஏப்ரல் -7 ம் தேதி நேரடியாக ஓடிடியில் ரீலிஸ் ஆக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.