'வேட்டை நாய்' கேட்டதும் ஓகே சொன்ன - ஆர்.கே.சுரேஷ்...

 
Published : Apr 23, 2017, 03:03 PM ISTUpdated : Sep 19, 2018, 03:11 AM IST
'வேட்டை நாய்' கேட்டதும் ஓகே சொன்ன - ஆர்.கே.சுரேஷ்...

சுருக்கம்

rk suresh new movie veetai naai

விநியோகஸ்தராகவும் தயாரிப்பாளராகவும் அறியப்பட்ட ஆர்.கே.சுரேஷ் , இயக்குநர் பாலாவின் 'தாரை தப்பட்டை' க்குப் பின் ஒரு நடிகராக அழுத்தமான அடையாளம் பெற்றார். அதன் பிறகு தொடர்ச்சியான பட வாய்ப்புகள் வரவே வரிசையாகப் படங்களில் நடித்து வருகிறார் .

ஒரு வில்லனாக அறியப்பட்ட ஆர்.கே.சுரேஷ்  , இப்போது தனி நாயகனாக 'தனி முகம் ' , 'பில்லா பாண்டி' போன்ற படங்களிலும் வேறு நாயகர்களின் படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.

ஓய்வில்லாமல் நடித்து வரும் அவரிடம் ஓர் இயக்குநர் கதை சொல்ல முன் வந்த போது  தேதிகள் இல்லை என்று ஆரம்பத்தில்  தவிர்த்திருக்கிறார். கதையைக் கேளுங்கள் என்று இயக்குநர் கேட்டபோது அரை மனதுடன் கேட்க உட்கார்ந்தவர்  , கதையைக் கேட்டு முடித்தவுடன்  எப்போது  படப்பிடிப்புக்குப்  போகலாம் என்றிருக்கிறார். 

அது மட்டுமல்ல தனது  தேதிகளைச் சரி செய்து கொடுத்துள்ளார். விரைவில் படம்  ஆரம்பிக்கப்படவுள்ளது. அந்தப் படம் தான்  'வேட்டை நாய் '. அப்படிக் கதை சொல்லி ஆர்.கே. சுரேஷைக் கவர்ந்திருப்பவர் தான்  எஸ்.ஜெய்சங்கர். இவர் ஏற்கெனவே அப்புக்குட்டியை நாயகனாக்கி இயக்கிய 'மன்னாரு  ' படம் பாலுமகேந்திரா போன்ற படைப்பாளிகளால் பாராட்டப்பட்டது.  'வேட்டை நாய் 'இவரது இரண்டாவது படம் .

நாயகனாக ஆர்.கே.சுரேஷ்  நடிக்க, நாயகியாக 'கடுகு' படத்தில் நடித்த சுபிக்ஷா நடிக்கிறார். ராம்கி, வாணி விஸ்வநாத் , தம்பி ராமையா, சரவண சக்தி , 'என் உயிர்த் தோழன் ' ரமா  ஆகியோரும் நடிக்கிறார்கள் .  இப்படத்தை தாய் மூவீஸ் தயாரிக்கிறது.

படம் பற்றி இயக்குநர் எஸ். ஜெய்சங்கர் பேசும் போது " படத்தின்  நாயகன்  முரடன் என்றால் அப்படி ஒரு முரடன். என்கிற அளவுக்குக் கடினமான மூர்க்கனாக இருப்பவன். ஆனால் அடிப்படையில் நல்லவன். இவ்வளவு நல்லவனா என்று அவனுக்குத் தெரியாது அப்படிப் பட்டவனை  உலகையே அறியாத குழந்தைத்தனம் கொண்ட பெண்  அவனை யார் என்று உணர வைக்கிறாள்.

இப்படிப்பட்ட இரு துருவ குணச்சித்திரங்களும் எப்படி இணைய முடியும்.?
அவர்கள் என்னென்ன பிரச்சினைகளை எதிர் கொண்டார்கள் என்பதே கதை.

இந்த நாயகன் பாத்திரத்தில் ஆர்.கே. சுரேஷ் சாரைத் தவிர யாரையும் என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. அப்படியே அவரிடம் கதை சொன்னேன் . பிடித்து விட்டது. இதோ அடுத்த வாரம் படப்பிடிப்பு தொடங்கவுள்ளோம்.  என கூறியுள்ளார்...

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!