பொய் நம்பாதீங்க! பரிசு தொகையை பற்றி முக்கிய தகவலை வெளியிட்ட ரித்விகா?

By manimegalai aFirst Published Oct 5, 2018, 12:05 PM IST
Highlights

பிக்பாஸ் 2வது சீசன் நிகழ்ச்சி கடந்த மூன்று மாதத்திற்கு முன் 16 போட்டியாளர்களுடன் தொடங்கியது. முதல் சீசன் எந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோ.. அந்த அளவிற்கு இரண்டாவது சீசனுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பு கிடைக்க வில்லை என்றாலும், யார் எப்படி பட்டவர்கள் என்பதை கணித்து, அவர்களுக்கு சப்போர்ட் செய்தனர் ரசிகர்கள்.

பிக்பாஸ் 2வது சீசன் நிகழ்ச்சி கடந்த மூன்று மாதத்திற்கு முன் 16 போட்டியாளர்களுடன் தொடங்கியது. முதல் சீசன் எந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோ.. அந்த அளவிற்கு இரண்டாவது சீசனுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பு கிடைக்க வில்லை என்றாலும், யார் எப்படி பட்டவர்கள் என்பதை கணித்து, அவர்களுக்கு சப்போர்ட் செய்தனர் ரசிகர்கள்.

பல்வேறு தடைகளை தாண்டி, ஒரு வழியாக வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார் நடிகை ரித்விகா. இவர்  டைட்டில் வின்னர் என்கிற அந்தஸ்தை பெற்று வெளியே வந்ததில் இருந்து தொடர்ந்து பல படங்களில் நடிக்க இவருக்கு  பட வாய்ப்புகள் குவிந்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் அவர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளதாகவும், பிக்பாஸ் போட்டியில் வென்ற 50 லட்சம் ரூபாயை சில நல்ல விஷயங்களுக்கு நன்கொடையாக  கொடுக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

இப்படி பரவிய தகவல்களுக்கு ட்விட்டரில் விளக்கம் கொடுத்துள்ளார் ரித்விகா. இது குறித்து அவர் கூறியுள்ளது..."நிறைய வதந்திகள் என் புதிய படம் மற்றும் நான் பரிசு பணத்தை நன்கொடை கொடுத்துவருகிறேன் என பரவி வருகிறது. எது செய்தாலும் அதை கண்டிப்பாக என் ட்விட்டர் கணக்கில் பதிவிடுவேன்" என அவர் கூறியுள்ளார்.

இதில் இருந்து அவர் புதிதகாக எந்த படத்திலும் ரித்விகா கமிட் ஆகா வில்லை என்பதும், பரிசு தொகையை நன்கொடையாக வழங்குவது குறித்து எந்த முடிவும் எடுக்க வில்லை என தெரிகிறது. 

There are lots of rumours going around about my new movie offers and me donating to various organisation.
I will post details regarding my movie offers and other details in my Twitter account ().
Thanks a lot for your love and unconditional support

— Riythvika✨ (@Riythvika)

click me!