
ரியல் ஜெய் பீம், பார்வதி அம்மாள் வாழ்க்கையை சினிமாக்கி சூர்யா எவ்வளவு சம்பாதிக்கிறார் என்று அப்பாவி குடும்பம் அறியாமல் ராயல்டி வாங்கவில்லை. அன்றும் இன்றும் அவர்களுக்கு நடந்தது அநியாயம் என்று நடிகையும் பாஜகவைச் சேர்ந்தவருமான காயத்ரி ரகுராம் விமர்சித்துள்ளார்.
சூர்யா தயாரிப்பு, நடிப்பிலும் ஞானவேல் இயக்கத்திலும் வெளியான‘ஜெய் பீம்’ படம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. 1994-ஆம் ஆண்டில் கடலூரில் நடைபெற்ற ஓர் உண்மைச் சம்பவத்தை மையாக வைத்து இந்தப் படத்தை சூர்யா தயாரித்துள்ளார். படம் வரவேற்பைப் பெற்ற போதிலும், உண்மை நிகழ்வில் அந்தோணிசாமி என்ற சப் இன்ஸ்பெக்டர் பாத்திரத்தை குருமூர்த்தி என்று மாற்றியதும், வன்னியர்களின் பண்பாட்டுச் சின்னமான அக்னி சட்டி காலாண்டர் இடம்பெற்றதும் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. சூர்யாவுக்கு எதிராக பாமகவினர் திரும்பியுள்ளனர்.
இதனையடுத்து அந்த காலண்டர் காட்சியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டது. இதற்கிடையே நடிகர் சூர்யாவுக்கு 9 கேள்விகளை எழுப்பி பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கடிதம் எழுதியிருந்தார். இந்தக் கடிதத்துக்கு நடிகர் சூர்யாவும் பதில் கடிதம் எழுதியிருந்தார். இதற்கிடையே நடிகர் சூர்யாவை முதலில் எட்டி உதைப்பவருக்கு ரூ. 1 லட்சம் வழங்கப்படும் என்று மயிலாடுதுறை பாமக சர்ச்சையான அறிவிப்பை வெளியிட்டது. இந்நிலையில் சூர்யா, ஜோதிகா ஆகியோர் 24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் 5 கோடி ரூபாய் நஷ்டஈடு தர வேண்டும் என்றும் வன்னியர் சங்கம் சார்பில் சூர்யாவுக்கு லீகல் நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது. சூர்யாவுக்கு எதிராக சமூக ஊடங்களில் பாமகவினர் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் அக்கினி சட்டி காலாண்டருக்குப் பதில் மகா லட்சுமி காலாண்டர் மாற்றப்பட்டதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஏசு நாதர் காலாண்டரை மாட்டாமல் மகா லட்சுமி காலாண்டரை மாற்றியது பற்றி தமிழக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கண்டித்திருந்தார். இதற்கிடையே ‘ஜெய் பீம்’ படத்தில் செங்கேணி கதாபாத்திரத்தின் உண்மையான ராஜ்கண்ணுவின் மனைவியான பார்வதி, “என் வாழ்க்கை கதையை வைத்து கோடி கோடியா சம்பாதிக்கிறார்கள். எனக்கு சூர்யா ஒரு உதவியும் செய்யவில்லை” என்ற காணொலி சமூக ஊடங்களில் வைரலானது. சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வேண்டுகோள்படி பார்வதிக்கு நேற்றே 10 லட்சம் ரூபாயை வங்கியில் டெபாசிட் செய்வதாக சூர்யா நேற்றே அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இதுதொடர்பாக பாஜகவைச் சேர்ந்தவரும் நடிகையுமான காய்த்ரி ரகுராம், நடிகர் சூர்யாவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார். அவருடைய பதிவில், “படம் எடுப்பதற்கு முன் உதவி செய்திருக்க வேண்டும் மற்றும் படம் எடுக்க குடும்பத்தினரிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். பார்வதியின் வீடியோவை அடுத்து சூர்யா, அக்குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் கொடுக்க முடிவு செய்தார். ஆனால், லாரன்ஸின் உதவிதான் உண்மையானது. உங்களுடையது (சூர்யா) தாமதமாக வழங்கப்பட்ட விலை” என்று சாடியுள்ளார் காயத்ரி ரகுராம்.
அடுத்தடுத்தப் பதிவுகளில், “பார்வதி அம்மாள் வாழ்க்கையை சினிமாக்கி சூர்யா எவ்வளவு சம்பாதிக்கிறார் என்று அப்பாவி குடும்பம் அறியாமல் ராயல்டி வாங்கவில்லை. அன்றும் இன்றும் அவர்களுக்கு நடந்தது அநியாயம். நிஜ ஹீரோ நடிகர் ராகவா லாரன்ஸ். தன்னிச்சையாக அவர்களின் (பார்வதியின்) வீட்டிற்கு சென்று தேவையானவற்றை செய்துள்ளார்.” என்றும் காயத்ரி ரகுராம் சாடியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.