அரசியல்வாதிகளை வைத்து மிரட்டி தியேட்டர் வாங்குகிறாரா பா.ரஞ்சித்? ’பரியேறும் பெருமாள்’ பரபரப்பு

By sathish kFirst Published Oct 3, 2018, 2:53 PM IST
Highlights

பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான ‘பரியேறும் பெருமாள்’ பரவலான பாராட்டுக்களை வெகுசில குட்டுக்களையும் பெற்று ஓரளவு சிறப்பாகவே ஓடிக்கொண்டிருக்கிறது.

பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான ‘பரியேறும் பெருமாள்’ பரவலான பாராட்டுக்களை வெகுசில குட்டுக்களையும் பெற்று ஓரளவு சிறப்பாகவே ஓடிக்கொண்டிருக்கிறது.

ஆனால் இப்படத்திற்கு போதிய அளவு திரையரங்களும், சரியான நேரத்தில் காட்சிகளும் கிடைக்கவில்லை என்கிற ஆதங்கத்தை தொடர்ந்து ஒருவாரமாக விடாமல் வெளிப்படுத்தி வருகிறார் பா.ரஞ்சித். உடன் வெளியான மணிரத்தினம் படத்திற்கு கிடைத்ததில் பத்தில் ஒரு பங்கு கூட தன் படத்துக்கு கிடைக்கவில்லை என்பது ரஞ்சித்தின் ஆதங்கம்.

திரையரங்குகளையும் காட்சிகளையும் அதிகரிக்கும் அவர் முயற்சி தொடர்ந்து தோற்றுக்கொண்டிருக்க, நேற்று அதிரடியாக திருமாவளவன், சீமான், வேல்முருகன்,சுப.வீரபாண்டியன் தொடங்கி துண்டு துக்கடா அரசியல்வாதிகள் வரை சுமார் 50 பேருக்கும் மேல் பிரிவியூ தியேட்டரில் பரியேற வைத்தார்.

தலைவர்கள் படம் பார்த்த புகைப்படங்கள், படம் குறித்த அவகர்களது கருத்துக்களை உடனுக்குடன் சமூக வலைதளங்களில் பதிவேற்ற ஒரு குழு முழுமைனைப்புடன் செயல்பட்டது.

இதன் மூலம் எனக்குப் பின்னால் எவ்வலவு தலைவர்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள். இனியும் தியேட்டர் தராமல் இழுத்தடிக்காதீர்கள் என்று ரஞ்சித் தியேட்டர்காரர்களுக்கு மறைமுக விடுப்பதாகவே தெரிகிறது என்கிறார்கள் ‘பரியேறும் பெருமாள்’ குறித்து பாராமுகமாக இருப்பவர்கள். 

click me!