அடக்கடவுளே... எல்லோரையும் சிரிக்க வச்சவங்களுக்கா இந்த நிலைமை..

Kanmani P   | Asianet News
Published : Dec 30, 2021, 02:48 PM IST
அடக்கடவுளே... எல்லோரையும் சிரிக்க வச்சவங்களுக்கா இந்த நிலைமை..

சுருக்கம்

ஏராளமான முன்னணி நடிகர்களுடன் நடித்த ரங்கம்மா பாட்டிக்கு தற்போது போதிய திரைப்பட வாய்ப்புகள் இல்லாததால், வறுமையில் சிக்கித் தவித்து வருகிறார். 

வடிவேலுவின் மார்க்க முடியாத காமெடிகளில் ஒன்றான "ந்தா அந்த நாயைக் கொஞ்சம் சூன்னு வெரட்டிட்டுப் போ" என்று சொல்லும் ரங்கம்மா பாட்டியின் நடிப்பு அனைவராலும் பாராட்டுப் பெற்றது. தள்ளாத வயதிலும் டைலாக்கை மறக்காமல் பேசும்திறன் கொண்டவர் ரெங்கம்மா பாட்டி. 

பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள ரங்கம்மா சமீப காலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார். இ இதனால் கடந்த 2018 -ம் ஆண்டு  மெரினா கடற்கரையில் கர்சீப் விற்று பிழைப்பை நடத்தி வந்துள்ளார். பின்னர் அவருக்கு  நடிகர் சங்கம் உதவி தொகையாக ரூ. 5000 வழங்கியது.  

இதையடுத்து சென்னையில் உடல்நலக்குறைவால் மிகவும் அவதிப்பட்டு வந்த ரங்கம்மா பாட்டியை அவரது உறவினர்கள் அவர் பிறந்த ஊரான கோவைக்கே அழைத்துச்சென்று, கவனித்து வருகின்றனர். உடல் நிலை சரியில்லாமல் இருந்தாலும் தான் மீண்டும் நடிப்பேன் என தன்னம்பிக்கையுடன் கூறுகிறார்.

அவ்வப்போது தனது நடிப்பை காணொளியில் பார்த்து ரசித்து வரும் ரங்கம்மா பாட்டி மீண்டும் நடிக்க தயாராகி வருவதாக கூறியுள்ளார். அதோடு யாரிடமும் இதுவரை உதவி கேட்கவில்லை என்றும், யாரேனும் உதவிக்கு வருவார்கள் என நம்பிக்கை இருப்பதாகவும் ரங்கம்மா பாட்டி கூறியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை சந்தித்த பாலிவுட் ‘பாட்ஷா’ ஷாருக்கான் - வைரலாகும் வீடியோ
தனுஷை தொடர்ந்து விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய செல்வராகவன்..?