
இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில், கடந்த ஆண்டே வெளியாக இருந்த 'காடன்' திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு தற்போது அறிவித்துள்ளது.
இயற்கை அழகை தன்னுடைய படங்களில் பசுமை மாறாமல் காட்டுபவர் பிரபுசாலமன். இவர் தற்போது யானைகளை மையமாக வைத்து இயக்கியுள்ள திரைப்படம் 'காடன்'. இந்த படத்தில் நடிகர் ராணா டகுபதி மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோர் ஹீரோக்களாக நடித்துள்ளனர். மிகப்பெரிய பொருட் செலவில், இந்த படத்தை ஈராஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியா முழுக்க உள்ள அனைத்து காட்டுப் பகுதிகளிலும் எடுக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் இந்த படத்தை இயக்கி முடித்துள்ளார் இயக்குனர் பிரபுசாலமன். மூன்று மொழிகளிலுமே நடிகர் ராணா தான் ஹீரோவாக நடித்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதமே இந்த படம் ரிலீஸ் ஆகும் என படக்குழுவினர் தெரிவித்திருந்தனர். பின்னர் கொரோனா பிரச்சனை தலைதூக்கவே, திட்டமிட்டபடி படத்தை வெளியிட முடியவில்லை.
மேலும் செய்திகள்: ஸ்லீவ்லெஸ் உடையில் சிக்குன்னு இருக்கும் கீர்த்தி சுரேஷ்... பார்த்தாலே கிக்கேற வைக்கும் ‘பளீச்’ கிளிக்ஸ்...!
பின்னர் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியானாலும் ஆனாலும், 50 சதவீத இருக்கைகள் மட்டுமே ஒதுக்கப்பட்டதால் படக்குழுவும் திரைப்படத்தை வெளியிட சற்று தாமதம் காட்டி வந்தது. இந்நிலையில், தற்போது தமிழகத்தில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ள நிலையில் மார்ச் 26ஆம் தேதி 'காடன்' திரைப்படம் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.