டிராபிக் ராமசாமி படத்தில் நடிப்பதில் பெருமிதம்...பிரகாஷ் ராஜ்! 

 
Published : Dec 23, 2017, 06:35 PM ISTUpdated : Sep 19, 2018, 01:43 AM IST
டிராபிக் ராமசாமி படத்தில் நடிப்பதில் பெருமிதம்...பிரகாஷ் ராஜ்! 

சுருக்கம்

prakash raj talk about traffic ramasamy movie

க்ரீன் சிக்னல்  கம்பெனி நிறுவனம் மூலமாக எடுக்கப்பட்டு வரும் படம் 'டிராபிக் ராமசாமி'. இந்தப் படம் வாழ்ந்துக்  கொண்டு இருக்கும் சமூகப் போராளி டிராபிக் ராமசாமியின் வாழ்க்கையைத்தழுவி எடுக்கப்பட்டு வருகிறது. 

இதில் டிராபிக் ராமசாமியாக இயக்குநர்  எஸ்.ஏ. சந்திரசேகர் நடித்துக்கொண்டு இருக்கிறார். அவருடைய மனைவியாக ரோகினி நடிக்கிறார் . இவர்களுடன்  ஆர்.கே.சுரேஷ், உபாசனா, இமான் அண்ணாச்சி, அம்பிகா, சார்லஸ் வினோத், மோகன்ராம், தரணி, சேத்தன், அம்மு, பேபி ஷெரின் ஆகியவரும் நடிக்கின்றனர். 

இப்படத்தில் விஜய் ஆண்டனி, எஸ்.வி.சேகர், கஸ்தூரி, மனோபாலா, மதன்பாபு ஆகியோர் கெளரவதோற்றத்தில் பங்குபெறுகிறார்கள்.

இவர்கள் தோன்றும் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களுக்குப்  பெரும் விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரகாஷ் ராஜ் இந்த படத்தில், முக்கியமான சக்தி வாய்ந்த அதிரடியான போலீஸ் கமிஷ்னராக  நடிக்கிறார் என்பது 

இதைப் பற்றிப் பிரகாஷ்ராஜ்  கூறும் போது " வாழ்ந்து கொண்டு இருக்கும் ஒரு சமூகப் போராளியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்தப் படத்தில் நான் நடித்ததை மிகுந்த பெருமையாக கருதுகிறேன்." என்று குறிப்பிட்டார். 

மேலும் பிரகாஷ் ராஜ் வரும் காட்சிகள் படத்திற்குப் பெரும் பலமாக இருக்கும் " என்று இயக்குநர் விஜய் விக்ரம் கூறியுள்ளார் . 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நடிகை நிதி அகர்வால் மீது கைவச்சது யார்? அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய போலீஸ்
தங்கமயிலின் அதிரடி முடிவு! - அம்மாவை நம்பினால் வேலைக்காது வீட்டு வாசலில் அமர்ந்து தர்ணா; நீதி கிடைக்குமா?