
தமிழ் திரையுலகில், மைனா, கும்கி, போன்ற பல வெற்றிப்படங்களை முன்னணி நடிகர்களையும் வைத்து படம் இயக்கியுள்ள இயக்குனர் பிரபு சாலமன். இவருடைய மகன் சஞ்சய் தற்போது ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். இந்த படத்தின் பூஜை இன்று போடப்பட்டு படப்பிடிப்பு துவங்கியது.
'ஜோ ஜோ இந்தியன் பிலிம் கார்பரேஷன்' தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை, இயக்குனர், கௌசிக் ஶ்ரீபுஹர் என்பவர் இயக்க உள்ளார். இந்த படத்திற்கு மிகவும் வித்தியாசமாக "டேய் தகப்பா" என்கிற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை C.V. விக்ரம் சுர்யவர்மா தயாரிக்க உள்ளார்.
ஆராத்யா என்பவர் சஞ்சய்க்கு ஹீரோயினாக நடிக்க உள்ளார் =, முக்கிய கதாபாத்திரத்தில் மதுரை முத்து, விஜய் டிவி புகழ் பப்பூ, ஹர்ஷ்த் கான் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்திற்கு இசை ஜான் ராபின்ஸ், ஒளிப்பதிவு - S.J.சுபாஷ். நடன இயக்கத்தை பாபா பாஸ்கர் மேற்கொள்கிறார். மேலும் ஹீரோவாக அறிமுகமாகும், இயக்குனர் பிரபு சாலமன் மகனுக்கு பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.