திருமணம் ஆகி இரண்டு வாரம் கூட ஆகல... கணவர் மீது போலீசில் பரபரப்பு புகார் கொடுத்த பூனம் பாண்டே!

By manimegalai aFirst Published Sep 23, 2020, 10:46 AM IST
Highlights

திருமணம் ஆகி, இன்னும் இரண்டு வாரம் கூட ஆகாத நிலையில், கோவா போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார் பூனம் பாண்டே.

இன்டர்நெட்டின் கவர்ச்சி கன்னியாக வலம் வருபவர் பூனம் பாண்டே.  சோசியல் மீடியாவில் உள்ள தன்னை பின்தொடரும் ரசிகர்களை குஷிப்படுத்துவதற்காக பல ஹாட் போட்டோஸை அப்லோடு செய்து , அனைவரது தூக்கத்தையும் கெடுத்து வருகிறார். சன்னி லியோனைப் போலவே  பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். 2013ம் ஆண்டு வெளியான நாஷா எனும் படத்தின் மூலம் அறிமுகமான பூனம் பாண்டே, தொடர்ந்து, கிளாமருக்கு முக்கியத்துவம் வாய்ந்த பல படங்களில் நடித்துள்ளார். 

மேலும் செய்திகள்: ஷிவானிக்கே செம்ம டஃப் கொடுப்பாங்க போல..! விஜய் டிவி புதுவரவு ரவீனா தஹாவின் செம்ம ஹாட் போட்டோ ஷூட் !
 

ஆபாச நடிகையாக இருந்த பூனம் பாண்டே தற்போது அதை எல்லாம் விட்டு விட்டு மாடலிங் மற்றும் பாலிவுட் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இருந்தாலும் அவ்வப்போது ரசிகர்களை உற்சாகப்படுத்துவதற்காக  தனது ஹாட் போட்டோஸை பகிர்ந்து வருகிறார்.  இன்ஸ்டாகிராமில் டாப்லெஸ், பிகினி மற்றும் நிர்வாண புகைப்படங்களை பதிவேற்றி சூடேற்றி வருகிறார்.

தனது கவர்ச்சி வீடியோக்களை வெளியிடுவதற்காக தனி வெப்சைட் ஒன்றை நடத்தி வரும் பூனம் பாண்டே. சர்ச்சைகளுக்கு பெயர் போனவர்.  போதாக்குறைக்கு அவ்வப்போது காதலருக்கு லிப் லாக் கொடுக்கும் வீடியோக்களை வேறு வெளியிட்டு நெட்டிசன்களிடம் வாங்கிக் கட்டிக்கொள்கிறார். 

மேலும் செய்திகள்: மணமகள் கெட்டப்பில் தங்க சிலை போல் ஜொலிக்கும் விஜய் டிவி சீரியல் நடிகை 'ரக்ஷிதா'..! குதூகல போட்டோ ஷூட்!
 

இந்நிலையில், பல வருடங்களாக காதலித்து வரும் தன்னுடைய  காதலர் பாம்பே என்பவரை பூனம் பாண்டே செப்டம்பர் 12 ஆம் தேதி  முறைப்படி திருமணம் செய்து கொண்டார். மணக்கோலத்தில் கணவருடன் இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

மேலும் செய்திகள்: நடிகர் கார்த்தியின் படத்தில் நடித்துள்ள வனிதா மகன் விஜய ஸ்ரீஹரி! வைரலாக பரவும் புகைப்படம்..!
 

இந்நிலையில் இவருக்கு திருமணம் ஆகி, இன்னும் இரண்டு வாரம் கூட ஆகாத நிலையில், கோவா போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார் பூனம் பாண்டே. இதில், தன்னுடைய கணவர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பாலிவுட் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

click me!