“அப்பா ஆவலுடன் காத்திருக்கிறார்”... எஸ்.பி.பி. உடல் நிலை குறித்து சரண் வெளியிட்ட நல்ல செய்தி...!

By Kanimozhi PannerselvamFirst Published Sep 22, 2020, 8:28 PM IST
Highlights

மயக்க நிலையில் இருந்து பூரணமாக மீண்ட எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வரும் எஸ்.பி.பி. குறித்து சரண் இன்று அசத்தலான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். 

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  அங்கு தொடர் சிகிச்சையில் இருந்த எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை கடந்த மாதம் 14ம் தேதி முதலே கவலைக்கிடமானது.  இதையடுத்து  எஸ்.பி.பி. நலம் பெற்று மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டுமென ஆகஸ்ட் 20 ஆம் திரையுலகினர், இசைப்பிரியர்கள், ரசிகர்கள், சாமானிய மக்கள் என லட்சக்கணக்கானோர் கையில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். 

அதன் பலனாக படிப்படியாக எஸ்.பி.பி. பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை முன்னேற்றம் அடைய ஆரம்பித்தது. மருத்துவர்கள் குழுவின் கண்காணிப்பு மற்றும் தீவிர சிகிச்சையால் மயக்கநிலையில் இருந்து முற்றிலும் சீரான நிலைக்கு வந்தார். எஸ்.பி.பி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல் இன்று வரை அவருடைய உடல் நிலை குறித்த தகவல்களை அவருடைய மகன் எஸ்.பி.பி.சரண்,  தினமும் சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார். எஸ்.பி.பி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது பல துரதிஷ்டவசமான வதந்திகள் பரப்பப்பட்டன. அதை தடுக்கவே சரண் தினமும் அப்டேட்களை வெளியிட்டு வருகிறார். 

 

இதையும் படிங்க: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த பிரபல நடிகரின் மகனும் பங்கேற்கிறாரா?... கமலின் ஸ்பெஷல் பரிந்துரையாம்...!

மயக்க நிலையில் இருந்து பூரணமாக மீண்ட எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வரும் எஸ்.பி.பி. குறித்து சரண் இன்று அசத்தலான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்த பதிவில், எக்மோ மற்றும் வெண்டிலேட்டர் மூலமாக சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவதற்காக அவர் ஆவலோடு காத்திருக்கிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

click me!